Skip to main content

“எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டாம், வேலைக்கு வர அனுமதித்தால் மட்டும் போதும்” - ஒப்பந்த பணியாளர்கள்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021
"Don't make us permanent, just let us come to work" -Contract Employees

 

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூலை மாதம் 2020ஆம் ஆண்டிலிருந்து கரோனா முதல் அலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். முதல் அலை முடிந்து இரண்டாம் ஆண்டு துவங்கிய நிலையில், இன்றுவரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வரக்கூடிய ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றியுள்ளனர்.

 

இவர்களில் பலர் தங்களது குடும்பங்களையும் இழந்துள்ள நிலையில், தற்போது அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர்களைப் பணியிலிருந்து வெளியேற வற்புறுத்திவருகிறது. இரண்டு அலைகளும் முடிந்த நிலையில் நீங்கள் பணியைவிட்டுச் செல்லலாம் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், இன்று (06.07.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் மனு அளித்துள்ளனர். இப்பிரச்சனை குறித்து ஒப்பந்தப் பணியாளர்கள் கூறுகையில், “எங்களை அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியாளராக வைக்க வேண்டாம்.

 

ஒப்பந்த அடிப்படையிலேயே எங்களை வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து எங்களுக்குப் பணி வழங்கினால் மட்டும் போதும் ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கு வழங்கக்கூடிய அதே மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை முறையாக வழங்கிட வேண்டும் என்று தங்களுடைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்த எங்களை தற்போது பணியிலிருந்து போக கட்டாயப்படுத்துவது எங்களுடைய வாழ்வாதாரத்தை அதிகளவில் பாதிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டாம் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியைத் தொடர அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.