தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருச்சி விமானநிலையத்தில் செய்தியர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது,

திமுக மாநாடு என்ற பெயரில் பா.ஜ.க எதிர்ப்பு மாநாட்டை நடத்தியுள்ளதால் திமுகவின் பிரதான எதிர்கட்சி பா.ஜ.கதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. அதுவரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும். அதை விடுத்து அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என பயமுறுத்திக்கொண்டிருக்க கூடாது. முடிந்தால் ராஜினாமா செய்யுங்கள் பார்ப்போம் என சவால் விடுத்துள்ளார்.

Advertisment

tamilisai

மேலும் பேசிய அவர், காவிரியில் மேலாண்மை அமைப்பதில் அதிமுக, திமுகவை விட பா.ஜ.கவிற்குதான் அக்கறை அதிகமுள்ளது எனவும் கூறினார்.