Advertisment

மாஸ்க் போடாமல் வெளியே செல்லாதீர்கள்... - கரோனா பாதித்த எம்.எல்.ஏ. வேண்டுகோள்!

hj

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டுலட்சத்தை கடந்துள்ளது.

Advertisment

மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள்என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. 15க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டம், கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இதுதொடர்பாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மாஸ்க் இல்லாமல் வெளியே போகாதீங்க, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்” என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe