Advertisment

'எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கக்கூடாது'-நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்!

'Don't give tickets by touching saliva'-instruction to conductors!

Advertisment

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் பேருந்தில் நடத்துநர் எச்சில் தொட்டு பயணிகளுக்கு டிக்கெட் வழங்கக்கூடாது என்ற அறிவிப்பை தமிழக போக்குவரத்துத்துறை வழங்கியுள்ளது.

ticket
இதையும் படியுங்கள்
Subscribe