Skip to main content

என் எல்லைக்குள் வராதே!!! தடை போட்ட ராணிப்பேட்டை மாவட்டம்...

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
 Don't fall within my range ... Ranipettai district


தமிழகத்தில் வேகமாக கரோனா பரவி வருகிறது. இருந்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் அதனை கட்டுப்படுத்துவதில் சுணக்கமாகவே உள்ளன. அதோடு, அனைத்துவிதமாக தொழிற்சாலைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளன.


அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து விதமான தொழிற்சாலைகளும் 100 சதவிதம் இயங்க தொடங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளுவர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்கு செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்ல அந்த நிறுவனங்கள் பேருந்துகளை இயக்குகிறது.

வாகன போக்குவரத்தை பொருத்தவரை வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஒரு மண்டலம். அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்றவை ஒரு மண்டலம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஒரு மண்டலம், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி மட்டும் ஒரு மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டலங்களுக்குள் பேருந்துகள் உட்பட வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம். மற்றப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வாகனங்களை இயக்கக்கூடாது என அரசு விதிமுறை வகுத்துள்ளது.

அதேபோல் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களுக்கு எந்த தடையுமில்லை என அறிவித்தும் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சொந்த ஊரை நோக்கி பயணமாகின்றன. அப்படி வருபவர்களால் அந்தந்த மாவட்டங்களில் நோய் தொற்று உருவாகி எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் தடுமாறத்துவங்கியுள்ளன. அதனை கவனத்தில் கொண்டு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வருபவர்களை தடுக்க துவங்கியுள்ளன மாவட்ட நிர்வாகங்கள்.

 

 

 Don't fall within my range ... Ranipettai district


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கிறது மாவட்ட காவல்துறை. இதற்காக மாவட்ட எல்லையிலேயே செக்போஸ்ட் அமைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து யாராவது வந்தால் அவர்களை திருப்பி அனுப்புகிறது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களைகூட அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில் இ-பாஸ் வாங்கிக்கொண்டு வருபவர்களை எல்லையில் புதியதாக ஏற்பாடு செய்துள்ள தற்காலிக கரோனா இல்லத்தில் தங்கவைத்து அவர்களுக்கு பரிசோதனை செய்து, நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டுள்ளார் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி.


காஞ்சிபுரம் மாவட்ட திருபெரும்புதூர் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரபல தனியார் நிறுவனம், நிறுவன பேருந்துகள் மூலம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜூன் 13ந் தேதி சென்றன. அந்த வாகனங்களை காஞ்சிபுரம் – இராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டரையில் காவல்துறை நிறுத்திவிட்டன.

இதுவேறு மண்டலம், காஞ்சிபுரம் வேறு மண்டலம் வாகன போக்குவரத்துக்கு அனுமதியில்லை எனச்சொல்லி நிறுத்திவிட்டது காவல்துறை. இதனால் தொழிற்சாலை நிர்வாகம் அதிர்ச்சியடைந்துவிட்டது. பின்னர் அதிகார மட்டத்தில் பேசி, தொழிலாளர்களை இறக்கிவிட்டுவிட்டு வாகனங்கள் இருப்பிடத்துக்கு செல்ல அனுமதி வழங்க அதன்படி வாகனங்கள் சென்றதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.