Advertisment

''ரொம்ப ஆடாத... கொஞ்சமா ஆடு...'' அரசு பேருந்து ஓட்டுநரை கடுப்பாக்கிய கார் ஓட்டுநர் 

சேலத்திலிருந்து எடப்பாடி நோக்கி சென்ற அரசு பேருந்துக்கு சாலையில் வழிவிடாமல் நபர் ஒருவர் காரை குறுக்கும் மறுக்கும் ஓட்டியது பேருந்து ஓட்டுநரையும், அதில் பயணித்த பயணிகளையும் கடுப்பேற்றியது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சாலையில் சென்று கொண்டிருக்கும் அரசு பேருந்துக்கு முன்னதாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று குறுக்கும் நெருக்கமாக சாலையில் நிற்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் பேருந்து ஓட்டுநர் காரின் ஓட்டுநரைப் பார்த்து ''ரொம்ப ஓவரா ஆடாத' என சொல்கிறார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து மீண்டும் காரை நகர்த்தும் அந்த நபர், சிறிது தூரம் சென்றவுடன் மீண்டும் பேருந்துக்கு வழி விடாத வகையில் காரை குறுக்காக நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து ஓட்டுநர் 'ஏன்டா ஆடுற... என்ன ஆட்டிட்டு இருக்கே... கொஞ்சமா ஆடு... ரொம்ப ஓவரா ஆடாத...'' என கடுப்பாகினர். அதன் பிறகு பேருந்து நடத்துனர் இறங்கி கார் ஓட்டுநரிடம் சமாதான பேசிய பிறகு பேருந்து எந்த இடையூறும் இல்லாமல் பயணித்தது. அந்த கார் ஓட்டுநர் நபர் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் மீது வழக்கு தொடர் வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

Advertisment

edapadi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe