Skip to main content

கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் தரலன்னா கேட்க கூடாது... எழுதி வாங்கும் அரசு கல்லூரி!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019


தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் மத்திய அரசு விதிமுறைகள்படி ரூ. 45 ஆயிரம் வரை சம்பளம் வழங்க வேண்டும் என்றாலும் தமிழக அரசு ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் வழங்கி வருகிறது. இப்போது அவர்களுக்கு அந்த சம்பளத்தையும் கொடுக்காமல் மே, ஜூன் மாதங்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால் அதை கேட்கமாட்டோம் என்று கௌரவவிரிவுரையாளர்களிடம் கல்லூரி நிர்வாகம் எழுதிவாங்குவது தான் கொடுமையின் உச்சம்.

Don't ask if we don't pay salary...   government colleges instruction to Honorary Lecturers


புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் (தன்னாட்சி) பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களிடம் அந்தந்த துறை தலைவர்கள் ஒரு துண்டு படிவத்தை கொடுத்து கையெழுத்து பெற்றனர். அந்த படிவத்தில்.. ஜூன் 2019  மாதத்திற்குறிய ஊதியம் கல்லூரி கல்வி இயக்ககம் வழங்காவிட்டால் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

அரசு உரிய கல்வித்தகுதி இல்லை என்று காரணம் காட்டி என்னை பணியிலிருந்து நீக்கப்படும் வேளையில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அச்சடிக்கப்பட்டுள்ள படிவத்தில் துறை தலைவர் வழியாக முதல்வர் மா.மன்னர் கல்லூரி பெற்றுள்ளது.

 

Don't ask if we don't pay salary...   government colleges instruction to Honorary Lecturers


அதேபோல அறந்தாங்கியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. சுமார் 50 விரிவுரையாளர்கள் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த கல்லூரியையும் ஏப்ரல் முதல் அரசு எடுத்துக் கொண்டதால் அதன் பிறகு மே, ஜூன் மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. மேலும் இங்கு பணிசெய்யும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 12 ஆயிரம்தான் ஊதியமாக கிடைக்கிறது. 

இந்நிலையில் இந்த கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 2 மாதம் ஊதியம் இல்லை என்ற நிலையில் மேலே உள்ளது போன்ற படிவத்தை புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி நிர்வாகம் எழுதி வாங்கி வருகிறது.

இது குறித்து சில கௌரவவரிவுரையாளர்கள் கூறும் போது.. இத்தனை மாதங்கள் வேலை பார்த்துக்கு சம்பளம் கொடுக்காமல் இப்போது சம்பளம் வரவில்லை என்றால் கேட்கமாட்டேன் என்று எழுதி வாங்குவது வேதனையாக உள்ளது. எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளது. எப்படி சமாளிக்க முடியும். அதேபோல எப்போது வெளியேறச் சொன்னாலும் வெளியேற வேண்டும் என்றும் எழுதி வாங்குகிறார்கள். இதை சிலர் எதிர்த்து வழக்கு போட்டதால் நீதிமன்றங்களில் இந்த பேப்பர்களை காட்டி எங்களுக்கு எதிராக திசைதிருப்பிவிடும் முயற்சியாக பார்க்கிறோம் என்றனர். ஒரு அரசாங்கம் தன் ஊழியரை சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றலாமா?.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மர்மமான முறையில் மாணவர் மரணம்; விசாரணை நடத்த போலீஸார் தயக்கம்?

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Police reluctant to investigate student passed away in Vellore

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது கார்க்கூர் கிராமம். இங்கு  இயங்கி வரும் பாலாறு வேளாண்மை கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிஷின் நகரை சேர்ந்த ரவி எலக்ட்ரிஷியன் என்பவர் இளைய மகன் பிரதாப் (18) என்பவர் முதலாமாண்டு  படிக்கிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி அரக்கோணம் சென்று தனது வீட்டில்  பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் பிப்-12ஆம் தேதி திங்கள் கிழமையன்று கல்லூரிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை சுமார் 6.00 மணியளவில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் ஜெராக்ஸ் எடுக்க அருகிலுள்ள மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காலை 7.00 மணியளவில் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் காட்பாடி செல்லும் ரயில் மார்க்கம் பகுதியில் இருப்பு பாதையில் மாணவன் பிரதாப் தலை மற்றும் முகத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த ரயில்வே பணியாளர்கள் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  மேல் பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த மாணவன் பிரதாப்பை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்தார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி, முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணிக்குச் சொந்தமானது. இந்த கல்லூரி மாணவர்தான் இறந்துள்ளார், இது கொலையா? தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்த வேண்டிய போலீசார் இதில் மெத்தனமாக விசாரணை நடத்துகின்றனர். இது முன்னாள் அமைச்சரின் கல்லூரி என்பதால் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி நடப்பதாக இறந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.