Skip to main content

நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்; பிரேதப் பரிசோதனைக்காக காத்திருப்பு

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு வடக்குப்பட்டி பகுதியில் ஆழ்குழாய் பாசனத்தில் பூ செடிகள் மற்றும் பல்வேறு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் பூ செடிகளை நாய்கள் விளையாடும் போது ஒடிந்துவிடுவதாக தின்பண்டங்களில் விஷம் கலந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திண்பண்டங்களை தின்ற அதே பகுதியை சேர்ந்த அழகப்பன், சத்தியசீலன் மற்றும் சிலர் வளர்த்து வந்த  4 க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளது. இதில் அழகப்பளின் நாய் மட்டும் அவரது வீட்டிற்கு அருகில் வந்து இறந்துகிடந்தது.

 

d


    அழகப்பனின் வளர்ப்பு நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அப்பகுதியில் தேடிய போது ஒரு தோட்டத்தில் பல இடங்களில் திண்பண்டங்களில் விஷம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனால் அழகப்பன் ஒரு விவசாயி பெயரைக் குறிப்பிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அப்பகுதி கால்நடை டாக்டர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். போலிசார் அழைத்தால் இறந்த நாயை பிரேதப் பரிசோதனை செய்ய வருவதாக கால்நடை டாக்டர் தகவல் கொடுத்ததால் மாலை வரை இறந்த நாய் இறந்த இடத்திலேயே கிடந்தது.     இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாய் சடலம்; மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Dog carcass in drinking water tank; Again a sensational incident

ஒரு வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு ஆண்டை கடந்து தற்பொழுது வரை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று பொது இடங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அண்மையில் காஞ்சிபுரத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள் எழ, அந்த தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் இறந்த நாயின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆட்டையான் வளைவு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து அரசுப் பள்ளி மற்றும் ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல குடிநீர் ஆபரேட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தண்ணீர் நிரம்பியுள்ளதா என்று சோதனை செய்தபோது அங்கு நாய் ஒன்று இறந்த நிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தாரமங்கலம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.