Skip to main content

நாயை நாய் எனச் சொல்லியதற்கு கொலை; திண்டுக்கல்லில் பரபரப்பு

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

 dog incident;stir in Dindigul

 

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட மோதலில் பக்கத்து வீட்டு முதியவரை நாய் உரிமையாளர் ஒருவர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்துள்ள மரவப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது பக்கத்து வீட்டார் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், ராயப்பனின் மகன் மற்றும் மகளின் குழந்தைகள் பொங்கல் விடுமுறை காரணமாக ஊரிலிருக்கும் வீட்டுக்கு வந்துள்ளனர். பக்கத்து வீட்டில் இருக்கும் நாயானது பல நேரங்களில் கட்டிப்போடப்படாமல் இருப்பதால் வீட்டிலிருந்து எகிறிக் குதித்து வெளியே வந்து அக்கம்பக்கத்தினரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. நேற்று ராயப்பனின் பேரக்குழந்தைகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கிற பொழுது அந்த நாய் குரைத்துள்ளது. இதைப் பார்த்த ராயப்பன் “அந்தப் பக்கம் போய் விளையாடாதீர்கள். அங்கு இருக்கின்ற நாய் கடித்து விடும்” எனக் குழந்தைகளை எச்சரித்துள்ளார்.

 

நாய் என ராயப்பன் சொன்னதைக் கேட்டுக்கொண்ட நாய் உரிமையாளர் வின்சன்ட் 'குழந்தையாக நினைத்து வளர்த்து வரும் நிலையில், எப்படி நீ நாய் என்று சொல்லலாம்' என ராயப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த வின்சன்டின் தம்பி டேனியல் ராஜா என்பவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து முதியவர் ராயப்பனை சரமாரியாகக் குத்தினார். தாக்குதலில் படுகாயம் அடைந்த ராயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவான டேனியல் ராஜாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.