Skip to main content

சர்ச் முன்பு கோயில் கட்டக்கூடாது– எதிர்ப்பால் சாலைமறியல்!!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

 

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சர்ச் உள்ளது. அது பொதுயிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த சர்ச் க்கு எதிரில் அரசு புறம்போக்குயிடம் காலியாகவுள்ளது. அந்தயிடத்தில் ஒரு தரப்பினர் கோயில் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கி நிதி வசூல் போன்றவற்றில் ஈடுப்பட்டுவந்தனர்.

 

protest

 

இன்று டிசம்பர் 26ந்தேதி காலை பூமி பூஜை போட்டு கோயில் கட்டுமானப்பணியை தொடங்குவதற்கான வேலைகளை செய்துவந்தனர். இதனை சர்ச் தரப்பினர் வந்து தடுத்துள்ளனர். ஏன் தடுக்கிறீர்கள் என கோயில் கட்டும் தரப்பினர் கேட்டுள்ளனர். சர்ச் க்கு முன்னாடி கட்டாதிங்க வேற எங்காவது போய் கட்டுங்க என்றுள்ளனர். இதனால் காரசார விவாதம் ஏற்பட்டது.

 

 

கோயில் கட்ட விடாதவர்களை கண்டித்து ஒருச்சாரார் திருப்பத்தூர் – பொம்மிகுப்பம் சாலையில் சாலைமறியல் அமர்ந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் அமர்ந்ததால் பதட்டமானது. போக்குவரத்து தடைப்பட்டதால் காவல்துறையினர் வந்து சமாதானம் பேசினர். அவர்கள் சொல்வதை யாரும் கேட்காததால் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து இருதரப்பையும் அழைத்து பேசினர்.

 

 

இப்போது போராட்டத்தை வாபஸ் பெறுங்கள், பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனச்சொல்லி 2 மணி நேர போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். நாங்கள் கோயில் கட்டியே தீருவோம் என ஒருத்தரப்பும், சர்ச் எதிரில் கோயில் கட்டக்கூடாது என மற்றொரு தரப்பும் வரிந்து கட்டிக்கொண்டு அதிகாரிகளிடம் தங்களது கருத்தை தெரிவித்தனர். இருதரப்பின் கருத்தை கேட்ட அதிகாரிகள், சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதற்குள் நாங்கள் இடம் பற்றிய கோப்புகளை ஆராய்கிறோம், சமாதான கூட்டத்தில் பேசுவோம் எனச்சொல்லியுள்ளனர்.

 

 

இருதரப்பினரும் கடும் கோபத்தில் இருப்பதால் அக்கிராமத்துக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.