Skip to main content

ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவா? திமுக நிர்வாகிகளின் குற்றச்சாட்டும் மறுப்பும்!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஏ.சி. சண்முகம் புதிய நீதி கட்சியை தனது முதலியார் சமூகத்தினரை அடிப்படையாக வைத்து தொடங்கினார். அந்த கட்சியின் சார்பாக தேர்தல் காலங்களில் திமுக, பாஜக போன்றகட்சிகளுடன்  கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் ஏ.சி. சண்முகத்திற்கு தோல்வியே மிஞ்சியது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதலியார் சமூகத்தினர் வெற்றியை தீர்மானிக்கும் சமூகமாக இருப்பதால் 2014ல் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்பொழுது 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வரை வாங்கி ஏ.சி. சண்முகம் இரண்டாம் இடம் பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் அப்துல் ரகுமான் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

Does AC support Shanmugam..?  DMK executives  Accusation and denial!


திமுகவின் பாரம்பரியமான வெற்றி தொகுதியான வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக மூன்றாம் பிடித்ததால் அது திமுகவிற்கு தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுபற்றி திமுக விசாரித்தபொழுது, ஏ.சி.சண்முகம் திமுகவில் உள்ள தனது முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களை தன்பக்கம் ஈர்த்து விட்டார் என்கிற தகவல் கேட்டு திமுக தலைமை வேதனையனடைந்தது. 

தற்போது நடைபெறும் வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 2014 ல் கடைபிடித்த அதே தேர்தல் பாலிசியை இந்த முறையும் கடைபிடிக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் திமுக தரப்பினர் வைத்து வந்தனர். திமுகவை சார்ந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் ஏசி சண்முகத்திற்காக மறைமுகமாக வேலை செய்து வருவதாக திமுகவினர் கூறிவருகின்றனர். 

 

Does AC support Shanmugam..?  DMK executives  Accusation and denial!


அதற்கு ஆதாரமாக நக்கீரனிடம் ஒரு புகைப்படத்தை ஆதாரமாக கட்டினார்கள். அதுபற்றி அவர்கள் கூறும்பொழுது, கடந்த 26ந் தேதி இரவு குடியாத்தம் நகரிலுள்ள செங்குந்த முதலியார் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரை ஏ.சி. சண்முகம் நேரில் சந்தித்து, முதலியார் சமூக மக்கள் அனைவரும் எனக்கே வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள் என பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் வேலூர் மத்திய மாவட்ட நெசவாளர் அணியின் நிர்வாகிளில் ஒருவரான பி.என்.தட்சிணாமூர்த்தி என்பவர் கலந்துகொண்டு, ஏசி சண்முகம் அருகில் அமர்ந்து நாம் எல்லோரும் நம்ம சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என சொல்லியுள்ளார். 

திமுகவில் சார்பு அணியிலும் இருந்துகொண்டு முதலியார் சமூக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம் என திமுக விசுவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். இவர் மட்டுமல்ல திமுகவில் இவர்போல் இன்னும் சிலரும் கட்சி பொறுப்புக்களில் இருந்துகொண்டு தங்கள் கட்சி வேட்பாளருக்கு வேலை செய்வதுபோல் நடித்துக்கொண்டே எதிர்போட்டியாளரான ஏ.சி. சண்முகத்திற்கு வேலை செய்கிறார்கள் என்கின்றனர்.

திமுகவினரின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபொழுது, ''நான் சங்கத்தில் மாவட்ட தலைவராக இருப்பது உண்மைதான். சங்கத்தின் சார்பில் கே.எம்.ஜி. பெரியவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அஞ்சலி செலுத்திவிட்டு நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டோம். அந்த நிகழ்விற்கு திடீரென ஏ.சி. சண்முகம் வந்திருந்தார். அவரும் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து அரசியல் பேசினார். இதனை கேட்டு அதிர்ச்சியான நான் அங்கிருந்து தூரமாக தள்ளி அமர்ந்துவிட்டேன். எனக்கு வேண்டாதவர்கள் இந்த தகவலை திரித்து பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் கட்சிக்கு விசுவாசமாகத்தான் உள்ளேன்'' எனக் கூறினார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்