Skip to main content

கோவை மருத்துவர் ரமேஷ் மனைவி சோபனா விபத்தில் காவல்துறை மறைத்த தடயங்கள் - அதிர்ச்சியூட்டும் டாக்டர் வீ.புகழேந்தி!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

டாஸ்மாக்கில் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்த மூன்றுபேரால் பெரும் விபத்து ஏற்பட்டு மக்கள் மருத்துவர் கோவை ரமேஷின் மனைவி சோபானா பரிதாபமாக உயிரிழிந்தார். மேலும், அவரது மகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கோவையில் நடந்த இக்கொடூர சம்பவத்தில்... விபத்து ஏற்படுத்தி உயிரைப்பறித்த குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்காமல் தடயங்களை அழித்து குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது காவல்துறை என்று பகீர் குற்றம்சாட்டுகிறார் மருத்துவர் ரமேஷின் நண்பரும் பிரபல மருத்துவருமான டாக்டர் வீ. புகழேந்தி.

kovai


"தமிழக அரசிற்கு Tasmac மூலம் அதிக வருமானம் இருப்பதும், காவல்துறையினர் அவர்களிடமிருந்து மாமூல் வாங்குவதும் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில், மருத்துவர் ரமேஷ் மனைவி சோபனா விபத்தில் சட்டரீதியாக காவல்துறை செய்யத் தவறியவை...

1.விபத்திற்கு குடிபோதை காரணமாக இருந்ததால் போராட்டம் வெடித்தும்,விபத்து ஏற்படுத்தியவர்களின் ரத்தத்தில் ஆல்ககால் அளவை உரிய நேரத்தில் பரிசோதிக்க தவறியது ஏன்?

2.சட்டப்படி பரிசோதனை செய்து IPC304(2) ன் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், குடிக்கவில்லை என இருக்கும் பிரிவின் கீழ் -IPC304(A)- வழக்கு தவறாக ஏன் பதிவு செய்ய வேண்டும்?

3.குடிபோதையில் விபத்து ஏற்படுத்துவது(IPC304(2)) பிணையில் விடுவிக்க முடியாது என இருக்க ஏன் அவர்களை பிடித்து கைது செய்யவில்லை?
4.விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் 3 பேர் பயணித்தனர் என இருக்கையில் FIRல் 2 பேர் மட்டும் இருப்பது ஏன்?

 

kovai


5.விபத்தை ஏற்படுத்திய வண்டியின் உரிமையாளர் யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

6.விபத்தை ஏற்படுத்திய நபருக்கு ஓட்டுநர் உரிமம் இருந்ததா? காவல்துறை அதை உறுதிபடுத்தியதா?

7.விபத்தை ஏற்படுத்தியவரின் விபத்து பதிவேட்டில்(Accident Register) ஆல்ககால் மூச்சுக்காற்றில் இருந்தது உறுதிபடுத்தப்பட்டும் அதை அறிந்தபின்னாவது வழக்கை ஏன் IPC304(2) கீழ் மாற்றவில்லை?

8.இந்தியாவில் 70% விபத்துக்களுக்கு ஆல்ககால் காரணமாக இருக்க புகாரில் அது இல்லாவிட்டாலும் அது குறித்து விசாரணை நடத்துவது காவல்துறையின் வேலையாக இருந்தும்,அதை செய்ய தவறியது ஏன்?

9.மற்றவர்கள் தரும் தகவலின் பேரில் மட்டும்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காதா?

10.இரத்தத்தில் 12 மணி நேரம் மட்டுமே ஆல்ககால் தெரியும் என இருக்கையில், எச்சில்,சிறுநீரில் 5 நாள் வரை தெரியும் என இருக்கையில் அந்த பரிசோதனைகளை விபத்து ஏற்படுத்தியவரிடம் மேற்கொள்ளாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருப்பது கோவை டாக்டர் ரமேஷின் மனைவி விபத்திற்கும் டாஸ்மாக்கை மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடயவியல் பரிசோதனைகளில் காவல்துறை மறைக்கும் தடயங்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் கோவை டாக்டர் ரமேஷ், வீ.புகழேந்தி உள்ளிட்ட டாக்டர்களுக்கு இந்தநிலை என்றால் அப்பாவி பொதுமக்களிடம் எப்படியெல்லாம் ஏமாற்றும் இந்த காவல்துறை?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.