Skip to main content

பெண் காவலரின் துணிச்சலை பாராட்டி பரிசளித்த டாக்டர்கள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Doctors who appreciated the bravery of the female policeman

 

செல்ஃபோன் பறித்துச் சென்ற ரவுடியை விரட்டிப் பிடித்த கர்ப்பிணி பெண் காவலரின் துணிச்சலையும், கடமை உணர்வையும் பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்கள் சூர்யா மருத்துவமனை டாக்டர்கள். அந்தப் பெண் காவலருக்கு உயரதிகாரிகளின் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

சென்னை பேசின் பாலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் சுசீலா. இவர்  கடந்த 24-ந் தேதி பேசின் பாலம் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது பேருந்தில் இருந்த ஒருவர் தனது மொபைல் ஃபோன்  திருடப்பட்டு விட்டதாகக் கதறினார். இதைப் பார்த்த பெண் காவலர் சுசீலா, பேருந்தில் பயணம் செய்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படி இருந்த இரண்டு  நபர்களைப் பிடித்து விசாரித்தார். அப்போது, பெண் காவலர் சுசீலாவை தள்ளிவிட்டு ஒருவர் தப்பியோடினார்.

 

மற்றொருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெண் காவலர் சுசீலா, பேசின் பாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், சுசீலா நடத்திய விசாரணையில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது புளியந்தோப்பு திருவிக நகரைச் சோ்ந்த 36 வயதுடைய ஜாபா் ஷெரீப்  என்பது தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் இருப்பதும்  தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட ரவுடியை  விரட்டிப் பிடித்த மூன்று மாத கர்ப்பிணியான சுசீலாவின் துணிச்சலை மக்கள் வியந்து பார்த்தனர். இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்தும் தனது கடமையை மறக்காத பெண் காவலர் சுசீலாவின் தைரியத்தை பாராட்டி  1 லட்சம் ரூபாய் பரிசளித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் காவல்துறையின் டெபுடி கமிஷனர், சூர்யா மருத்துவமனையின் டாக்டர்கள் அனந்தகுமார், ராஜீவ் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசளித்து பாராட்டிய டாக்டர் ஸ்ரீகுமார், "உங்களின் துணிச்சல் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்க சக்தி" என்று வாழ்த்தினார். இந்த நிலையில், சுசீலாவை  காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.