இன்று ஜூலை 1சர்வேதசமருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை எழும்பூரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கை ஏற்றிநிகழ்ச்சியைதொடங்கி வைத்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றியமருத்துவர்களுக்குபாராட்டு சான்றிதழ் மற்றும் மலர்க்கொத்து கொடுத்து அமைச்சர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில்பங்குபெற்ற மருத்துவர் ஒருவர் அமர்ந்த படியே தூங்கும் காட்சிகள் தற்பொழுது இணையத்தில்வைரலாகிவருகிறது. பரபரப்பாக நிகழ்ச்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மருத்துவர் ஒருவர் அசந்து தூங்கியதை யாரோசெல்போனில்வீடியோபதிவு செய்து வெளியிட அந்த காட்சிகள்வைரலாகிவருகிறது. அந்தவீடியோவில்நிகழ்ச்சியின் இறுதியில் தேசியகீதம் ஒலிக்கப்பட்டவுடன் சிறிது நேரம் கழித்துத் தூங்கிக்கொண்டிருந்த மருத்துவர் எழுந்து நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.