Skip to main content

மருத்துவ பணியை தாண்டி மருத்துவரின் மனிதாபிமான உதவிகள்... நோயாளிகளின் பசியை போக்கும் முயற்சி...

Published on 03/05/2020 | Edited on 03/05/2020
 tiruvannamalai



கரோனா நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு நாடெங்கும் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அமைப்ப சாரா தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஏழை மக்கள் பெரிதும் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான காசநோய் நோயாளிகள் உள்ளனர். இந்த நோய் உலகளவில் அபாயகரமானதாகும். இந்த நோய்க்கான சிகிச்சை முறையாக, சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளவில்லையெனில் உயிரை பறித்துவிடும் தன்மை கொண்டது. இந்த நோய் தாக்கியவர்களின் உடல் சக்தியை இழந்துவிடும், எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதற்காக காசநோய் வந்தவர்களுக்கு அரசாங்கம்மே குறிப்பிட்ட ஒரு குறைந்த பட்ச தொகையை வாழ்க்கை நடத்த வழங்கி வருகிறது. அந்த தொகை போதாத நிலையில் சிலர் கூலி வேலைக்கு சென்றும் வருகின்றனர்.
 

தற்போது பொதுமக்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் காசநோயாளிகள் பலர் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த தகவல் திருவண்ணாமலை மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குநர் மருத்துவர் அசோக் அவர்களின் கவனத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து, அரசு தரும் நிதியோடு, காசநோய் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முன்வந்து தந்த நிதியை கொண்டு தலா ஆயிரம் ரூபாய் செலவில் மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்தனர். முதல் கட்டமாக 13 நோயாளிகளுக்கு அதனை வழங்கினர். 
 

அடுத்த கட்டமாக இன்னும் சிலருக்கு வழங்க வேண்டிய நிலையில் இருந்தனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கவனத்துக்கு சென்றது. மருத்துவ அதிகாரி, பணியாளர்களின் செயலை பாராட்டியவர், அவரது உத்தரவுப்படி, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா ஏற்பாட்டில், 17 காசநோய் நோயாளிகளுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை அரசின் சார்பில் வழங்க முன்வந்தார். 17 நோயாளிகள் வீட்டுக்கு மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் மரு.அசோக் மற்றும் மருத்துவர், ஊரக வளர்ச்சித்துறையினர் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உதவிகள் வழங்கினர்.
 

இதுப்பற்றி துணை இயக்குநர் மருத்துவர் அசோக் கூறியது, காசநோய் பாதித்தவர்கள் பலர் ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள். தற்போது அவர்களுக்கு எந்த வித வேலையும் கிடையாது, இதனால் உணவுக்கே கஷ்டப்படுகின்றனர். காசநோய்க்கு தரப்படும் மாத்திரைகள் அதிக சக்தி கொண்டது. அதை சாப்பிடும்போது அதிகளவு சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் உடலில் வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும், அவர்கள் சாப்பாடு சாப்பிட வழியில்லை என மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் விட்டால் இவ்வளவு நாள் அவர்கள் பெற்ற சிகிச்சை பலனில்லாமல் போய்விடும். 

 

ு

இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு யோசித்தே, வறுமையில் உள்ள காசநோயாளிகள் குடும்பத்தார்க்கு உதவ முன்வந்தோம். எங்கள் துறையில் பணியாற்றும் சக பணியாளர்கள் ஒத்தொழைப்புடன் முதல் கட்டமாக உதவி செய்தோம். அதன்பின் மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்து வழங்குகிறது. இதுவரை மாவட்டத்தில் 30 காசநோயளிகள் பயன் அடைந்து உள்ளனர். இதுபோன்று வறுமையான காசநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவி பொருட்கள் வழங்கும்  பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் காசநோய் பாதித்தவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று காசநோய் மாத்திரைகள் வழங்கும் பணி கடந்த ஒரு மாதமாகவே நடைபெற்று வருகின்றது என்றார்.
 

மருத்துவபணியை தாண்டி இப்படி மனிதாபிமானத்தோடு மருத்துவர்கள் பணியாற்றுவதால் தான் நம் மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.