Skip to main content

உடலுறுப்பு தானம் செய்ய விருப்பமா ? உடனே மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உடலுறுப்பு தானம் செய்ய இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் நேர்மையாக உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை செய்ய இந்த இணையதளம் உறுதி செய்கிறது. இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் மக்கள் எளிதாக உடலுறுப்பு தானம் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்தவே மத்திய அரசு இத்தகைய இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதற்கான இணைய தள முகவரி : https://www.notto.gov.in/ இந்த இணையதளத்திற்கு சென்று உடலுறுப்பு தானம் செய்வோர்கள் தனக்கென்று "LOGIN" ID உருவாக்க வேண்டும். பின்பு "USER NAME" மற்றும் "PASSWORD" கிடைக்கும். 

 

organ donation



இதனை உள்ளீடு செய்து Form - 7 - ல் உடலுறுப்பு செய்வோரின் முழு விவரங்களை பதிவிட வேண்டும்  , இதில் Blood Group , Aadhaar Number , புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் . மேலும் எந்தெந்த உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்புவீர்களோ அதனை பதிவு செய்து , தன் நெருங்கிய உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் பெயர் மற்றும் முகவரி , தொலைப்பேசி பதிவு செய்து சமர்பிக்க வேண்டும்.   ஏனென்றால் உடலுறுப்பு தானம் செய்த நபர் இறந்துவிட்டால் அவரின் நண்பர்கள் மத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிப்பார். பின் சமந்தப்பட்ட மாவட்ட அரசு மருத்துவர்களை அனுப்பி உடலுறுப்புகளை பெற்று உடலுறுப்பு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி விடுவார்கள். 

 

organ donate



மத்திய அரசின் (National Organ & Tissue Transplant Organization ) "NOTTO" மூலம் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உடலுறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பின்பு சில நாட்கள் கழித்து உடலுறுப்பு தானம் செய்ய பதிவு செய்தவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் "DONOR PLEDGE" விரைவு தபால் மூலம் வீட்டிற்கு வரும். இதன் மூலம் நாம் இறந்த பிறகும் மற்றவர்கள் மூலம் வாழலாம் என்பது எவராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு இளைஞரும் உடலுறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. அதே போல் உடலுறுப்பு தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பான மேலும் உதவிக்கு இலவச தொலைபேசி எண் : 1800114770 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.