Skip to main content

நாங்க யார் தெரியுமா? வேலூரில் தலைதூக்கும் ரவுடிசம் - கண்டுகொள்ளாத காவல்துறை!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் இப்போதுயெல்லாம் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காவல்துறை அதனை கண்டும் காணாமல் இருக்கிறது. ரவுடிஸம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால் நான் அமைச்சரோட ஆள் எனச்சொல்வதால் என்ன செய்வது எனத்தெரியாமல் போலிஸார் முழிக்கின்றனர் என்கின்றனர்.

 

 Do you know who we are? .Veloor Rowdism - Unseen Police!

 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அடிதடி ஒன்றில் அடிப்பட்ட சித்திக் என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 29ந்தேதி இரவு மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சித்திக்கை தாக்கியுள்ளனர். அதோடு, மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

 

 Do you know who we are? .Veloor Rowdism - Unseen Police!


இந்த தகவல் மருத்துவமனை தரப்பில்இருந்தே காவல்துறைக்கு சொல்லப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்து பார்த்த காவல்துறை அதிகாரிகள், அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் விசாரித்தவர்கள், யார் வந்து தாக்கியது என சித்திக்கிடம் கேட்டுள்ளனர்.  வாணியம்பாடி நேதாஜீநகர் இம்தியாஸ், தனது ஆட்கள் 15 பேருடன் வந்து தாக்கினான் எனக்கூறியுள்ளார். ஏரியாவில் அவர் ரவுடித்தனம் செய்கிறார், அதுப்பற்றி கேட்பவர்களை தாக்குகிறார் எனச்சொல்லியுள்ளார்.

போலிஸார் உடனடியாக இரவோடு இரவாக சித்திக் கை கைது செய்தனர். சித்திக்குடன் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. தப்பியோடி தலைமறைவாக உள்ள பத்துக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 Do you know who we are? .Veloor Rowdism - Unseen Police!

 

வாணியம்பாடி நகரத்தில் ரவுடிஸம், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் செய்யும் சின்ன சின்ன ரவுடிகளை பிடித்தால் நாங்க யார் தெரியுமா?, அமைச்சரோட ஆளுங்க என வாணியம்பாடி எம்.எல்.ஏவும், அமைச்சர் நிலோபர்கபிலின் பெயரை சொல்வதால் போலிஸார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கின்றனர். அப்படி நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவே மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள் வாணியம்பாடி ரவுடிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.