Skip to main content

ஆண்டாண்டு காலமாக குடியிருப்போரை தொந்தரவு செய்வதா ? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் 

Published on 18/03/2018 | Edited on 18/03/2018
mariyal

 

ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் பொதுமக்களை தொந்தரவு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்டது நாட்டாணிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு தஞ்சை மன்னர்கள் மானியமாக அளித்ததாக கூறப்படுகிறது. 

 

அவர்கள் வழிவந்தவர்கள்  சவுரிராஜன்- செண்பகத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ராமானுஜன், சீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர். மன்னர் காலத்தில் மானியமாக வழங்கப்பட்ட சுமார் 170 ஏக்கர் நிலங்கள் நாட்டாணிக்கோட்டை வடக்கு, தெற்கு, கழனிவாசல், முடப்புளிக்காடு, நீலகண்டபுரம் என பரவலாக உள்ளதாக கூறப்படுகிறது. 

 

கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த செண்பகத்தம்மாள் மற்றும் அவரது இளைய மகன் சீனிவாசன் ஆகியோர் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மூத்த மகன் ராமானுஜனும் சிலரிடம் கிரயம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ராமானுஜன், சீனிவாசன் சகோதரர்கள் இடையே சொத்துப்பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, ராமானுஜனுக்கு நீதிமன்றம் 70 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமானுஜன் மற்றும் அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு மற்றும் நீதிமன்ற ஆணையர்கள்  பழனிவேலு, ஜெயகுமார் ஆகியோர் சனிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் அளவீடு செய்ய வந்துள்ளனர்.

இதையடுத்து பல ஆண்டுகளாக தாங்கள் கிரையம் பெற்று குடியிருந்து வரும் இடம் பறிபோகுமோ என அச்சப்பட்ட, 500 பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற ஆணையர்களிடம் கண்ணீருடன் முறையிட்டனர். இதையடுத்து திகைத்துப்போன நீதிமன்ற ஆணையர்கள், " அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி, காவல்துறைக்கு தகவல் அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர். பின்னர் இராமனுஜன், அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு ஆகியோரிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. 

 

இதையடுத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்திற்கும் சென்று முறையிட்டனர். பொதுமக்கள் சார்பாக ராஜேந்திரன் என்பவர் இராமானுஜன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் மனு ரசீது அளித்த காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை எனக்கூறி மாலை 5 மணி வாக்கில், கிராம தலைவர்கள் வீராசாமி,  சுந்தர்ராசு, நீலகண்டன் ஆகியோர் தலைமையில், பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் காவல்நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  சாலைமறியல் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

 

இந்நிலையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் 8 பேர் மீது அரசு அதிகாரிகளை ஆபாசமாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்தது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதையடுத்து ஞாயிறு அன்று கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து முறையிடுவதற்காக தஞ்சாவூர் புறப்பட்டு சென்றனர்.

 

இச்சம்பவம் காரணமாக இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்தை விட்டு அப்புறப்படுத்த நடந்து வரும் முநற்சியால் அப்பாவி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்களுக்கு உரிய தீர்ப்பை வழங்குவார் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 10th, 11th, 12th General Examination Time Table Publication

 

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''10, 11, 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் ஏற்கனவே படித்து நன்றாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். தமிழ்நாட்டு முதல்வர் சொல்வது போல இந்த வயது என்பது 'படிப்பு... படிப்பு... படிப்பு...' என அதில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய வயது. வேற எந்த ஒரு விஷயத்திற்கும் நமது நாட்டம் சென்றுவிடாமல் நீங்கள் கவனமாக நல்ல முறையில் படித்து நல்ல விதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாக வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்'' என்றார்.

 

தொடர்ந்து வெளியான பொதுத்தேர்வு கால அட்டவணையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 26/3/2024 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 19/2/2024 தொடங்குகிறது.11 ஆம் வகுப்பு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.23 ஆம்  தேதி தொடங்கி பிப்.29 தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 

தமிழ் -    26/03/2024

 

ஆங்கிலம் -    28/03/2024

 

கணிதம் -    01/04/2024

 

அறிவியல் -   04/04/2023

 

சமூக அறிவியல் -   08/04/2024

--------------------------------------------------------------------------

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 

மொழிப்பாடம்-     04/03/2024
 
ஆங்கிலம்-       07/03/2024

இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்- 12/03/2024

கணினி அறிவியல்/ புள்ளியியல் - 14/03/2024
 
உயிரியல் /வணிக கணிதம் / வரலாறு - 18/03/2024

வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்- 21/03/2024

--------------------------------------------------------------------------

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  அட்டவணை

 

மொழிப்பாடம் -     01/03/2024

 

ஆங்கிலம் -       05/03/2024

 

கணினி அறிவியல்/ உயிரி அறிவியல்/ புள்ளியியல்-    08/03/2024

 

வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்-  11/03/2024

 

இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்-  15/03/2024

 

கணிதம்/ விலங்கியல்/நுண் உயிரியல்-  19/03/2024

 

 

Next Story

திண்டிவனம் அருகே ராஜநாகம்; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Rajanagam is near Tindivanam and the public is in fear

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு வடகிழக்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆவணிப்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்குச் சொந்தமான காலி மனை புதர் மண்டிக் கிடந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 12 அடி நீளம் உள்ள மிகப்பெரிய ராஜநாகம் இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். பார்த்ததோடு அதை தங்கள் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்த தகவலை திண்டிவனம் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தெரிவித்தனர். அவர்கள்  பொக்லைன் இயந்திரம் கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்து பார்த்தனர். பல மணி நேரம் தேடியும் ராஜநாகம் கிடைக்கவில்லை. 

 

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் கூறும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தான் இதுபோன்ற ராஜநாகம் வசிக்கும். கிராமங்கள் நிறைந்த இப்பகுதியில் ராஜநாகம் இருப்பது வியப்பாக இருக்கிறது. அது இங்கே எப்படி வந்திருக்கும்; இப்பகுதியில் இருந்து யாராவது நான்கு சக்கர வாகனங்களில் மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருப்பார்கள். அப்படி சென்றவர்கள் அங்கே பல மணி நேரம் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். ராஜநாகக் குட்டிகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அந்தப் பகுதி இருந்திருக்கும். அதன் காரணமாக அந்த வாகனங்களின் சந்து பொந்துகளில் ஏறி ராஜநாகக் குட்டி தங்கி இருக்கும். அதன் மூலம் இப்பகுதிக்கு வந்திருக்கும். அது இங்கே வளர்ந்து 12 அடி நீளம் உள்ள ராஜநாகமாக வளர்ந்துள்ளது எனத் தெரிய வருகிறது 

 

இதனால் கிராம பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இருந்தும் இந்த ராஜநாகத்தின் நடமாட்டம் தெரிந்த உடனே எங்களுக்குத் தகவல் அளித்தால் உடனே விரைந்து வந்து அதைப் பிடித்து வனத்துறையில் விடுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர். திண்டிவனம் பகுதியில் ராஜநாக நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.