Skip to main content

’எங்களுக்கு மணல் குவாரி வேண்டவே வேண்டாம்’ திருவையார் விளாங்குடி கிராமமக்கள் பிடிவாதம்

Published on 18/03/2018 | Edited on 18/03/2018
kuvari

 

"உங்களை நம்ப முடியாது, காவிரி  உரிமை தண்ணீரையே உங்களால் வாங்கி கொடுக்க முடியல, தண்ணீர் இல்லாம பசுமையான பல இடங்கள் பாலைவனமாக மாறிடுச்சி. எங்க கிராமத்துல குடி தண்ணீராவது பஞ்சமில்லாம கிடைக்கிறது. அதுக்கும் மணல் குவாரி அமைத்து வேட்டு வைக்க விடமாட்டோம். எங்கள் கிராமத்தில் மணல் குவாரி தேவையில்லை அமைக்க விடமாட்டோம்." இப்படி ஒரு கிராமமே வைராக்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே உள்ளது விளாங்குடி . அந்த கிராமத்தில் மணல் குவாரி அமைப்பதற்காக பொக்கலைன் இயந்திரத்துடன் சிலர் வந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைப் படித்தனர். 

 

இரண்டு மணி நேரம் கழித்து "எங்க  ஊர்ல மணல் குவாரி அமைக்க முடியாது, இதனால எத்தனை பேர் வேண்டுமானாலும் சிறைக்கு போக நாங்க தயார். இங்கிருந்து வண்டிய எடுக்கிட்டு போங்க " என அடிக்காத குறையாக விரட்டினர் அந்த கிராம பெண்கள்.

 

 இதனை அடுத்து பொது மக்களை இன்று மாலை திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. அங்கு கூறிய பொதுமக்களோ, " மணல் அள்ளுவதால் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாழாகிடும், அதோடு, மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு கரைகள் ஊடயும் , அதனால எங்க கிராமம் மட்டுமல்ல மாவட்டமே பாதிச்சிடும். எங்களுக்கு மணல் குவாரி வேண்டவே வேண்டாம், என பிடிவாதமாக இருந்தனர். 


இறுதி வரை பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் கூட்டம் கலைந்தது.

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விதிகளை மீறி செயல்படும் கல்குவாரி; ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்த கிராம மக்கள்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Calquary operating in violation of the rules; Villagers invaded the Collectorate

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென வந்த கிராம மக்கள், விதிமுறை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கரடிக்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு கல் உடைத்து எடுக்க அரசிடம் கல்குவாரி அனுமதிக்கான உரிமத்தை பெற்று கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். அரசின் விதிகளை மீறி தினமும் 24 மணி நேரமும் கல் உடைத்து எடுப்பதாகவும். இரவு நேரங்களில் அதிகப்படியான கனத்த ஒலி எழுப்பக்கூடிய வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை வெடிக்கச் செய்கிறார்கள்.

இதனால் இரவில் தூங்க முடியவில்லை, வயதானவர்கள் இந்த சத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், பயப்படுகின்றனர். மருத்துவ நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தங்கள் கிராமத்தின் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு குடிநீர் ஆதாரமும் பாதிக்கிறது. விதிகளை மீறி அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தும் விதமாக வெடிவைத்து மலையை வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனை ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.

முன்னதாக கரடிக்குடி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் திடீரென வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அங்கு நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததைக் கண்டு ஒரே பிரச்சனைக்கு அவ்வளவு பொதுமக்கள் கூடியதைப் பார்த்து அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அதன்பின் போலீசாரை வைத்து முக்கியமானவர்கள் மட்டும் பேசுங்கள் எனச்சொல்லி அவர்களை மட்டும் உள்ளே இருந்து மனு தரச்செய்தனர்.