Skip to main content

"பொன்பரப்பியில் நடந்தது என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்..." - பாமக டாக்டர்.செந்தில்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

அரியலூர் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பல்வேறு கருத்துகள், குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. பாமக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாமக பிரமுகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.செந்தில் நமக்கு அளித்த பதில்கள்...  

  

 "Do not talk about what happened in Bonparapi ..." - pmk Dr. Senthil

டாக்டர் செந்தில் : 

தமிழகத்தில் முற்போக்கு என்பது புதிய வடிவத்தைப் பெற்று வருகிறது. எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அதில் தொடர்புடைய இரண்டு தரப்புகளின் சாதி, அவர்கள் பின்பற்றும் கருத்தாக்கம் இவற்றைக் கொண்டு முன்முடிவுகளோடு 'இவன்தான் தப்பு செய்திருப்பான்' என்று அணுகுகிறார்கள். சமீபத்தில் அரியலூரில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் கொல்லப்பட்டபோது அது ஏதோ ஒரு சமூகமே சேர்ந்து செய்தது போல பரப்பினார்கள். இறுதியில் நடந்தது வேறு. அதுபோல மரக்காணத்தில் நடந்த சம்பவத்தின் துவக்கத்தைப் பேசாமல், ஏதோ பாமகதான் வன்முறை செய்தது போல பரப்புரை செய்தார்கள். அது மிகப்பெரிய சதி.

 

 

பொன்பரப்பியில் நடந்த உண்மையை சொல்கிறேன். வீரபாண்டியன் என்ற மாற்றுத்திறனாளி வாக்களிக்கப் போகிறார். அவரை திருமாவளவனுக்கு வாக்களிக்கச் சொல்லி தாக்குகிறார்கள் அங்கிருந்த வி.சி.க.வினர். இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பானையை உடைக்கிறார்கள் அதிமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து விசிக கட்சியினர் வசிக்கும் அந்தப் பகுதி வழியே செல்லும் அதிமுக கூட்டணியை சேர்ந்த சுப்பிரமணியன், கமலக்கண்ணன் உள்ளிட்டோரை பயங்கரமாகத் தாக்குகிறார்கள் விசிகவினர். மது பாட்டிலை உடைத்து தாக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து சாலை மறியல் செய்தவர்கள் மீதும் தொடர்ந்திருக்கிறது தாக்குதல். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவர் மஞ்சள் சட்டை அணிந்தவர் என்பதற்காகவே அவரையும் தாக்கியிருக்கிறார்கள், ஆனால் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இது தெரியாமல் மக்கள் கொதிக்கிறார்கள். அரியலூர் திமுக செயலாளர் சிவசங்கர் பொன்பரப்பி மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பிரயோகிக்க வேண்டுமென்கிறார். இந்த ஒரு சம்பவமென்று இல்லை. இந்தியா முழுவதும் இந்த பேட்டர்ன் நடக்கிறது. தமிழகத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒரு சில கருத்துகளை பேசினால் முற்போக்கு என்று நினைத்துக்கொள்கிறார்கள்".

 

 

கேள்வி: பொன்பரப்பியில் நடந்த வன்முறை வீடியோவை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு சாதியின் பெயரைச் சொல்லி திட்டுவது போல இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு குடியிருப்பில் புகுந்து பலர் தாக்குவது தெரிகிறதே?

 

டாக்டர் செந்தில் :  இல்லை, இல்லை... எல்லோரும் தாக்கப்பட்டவர்கள் பட்டியலின மக்கள் மட்டுமே என்று பேசுகிறார்கள். அதிகமாகத் தாக்கப்பட்டது பிறரே. பெரியாரிடம் இவர்கள் சமூக நீதி, சாதி ஒழிப்பை கற்றுக்கொள்வதை விட அவர் கொண்டிருந்த நேர்மையை கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பலரும் தவறு செய்தவர்கள் எந்த சாதியென்று பார்த்து அதற்கேற்ப செய்தி பரப்பி ஒரு கேரக்டர் அசாசினேஷன் செய்கிறார்கள். இது போல பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. இறுதியில் உண்மைதான் நிக்கும். தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கவேண்டாமென்று நினைப்பவர்கள் கொஞ்சம் நேர்மையாக இதை அணுகி உண்மையை செய்தியாகவேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.