Skip to main content

’அரசியலாக்க வேண்டாம்’ - அற்புதம்மாள் வேண்டுகோள்

Published on 09/09/2018 | Edited on 09/09/2018
ar

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று முடிவெடுத்து என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் இன்று மாலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்றார்.

முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

 

elephant

 

அப்போது அவர், ’’என்னுடைய 28 ஆண்டுகால வேதனைக்கும், வலிக்கும் விடுதலை கிடைத்துள்ளது.  வரலாற்று சிறப்பு மிக்க விடுதலை என்று நினைக்கிறேன்.  சிறையில் இருப்போரின் வலி்யையும், வேதனையையும் அதிமுக அரசு உணர்ந்துள்ளது.  ஆகவே  7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்துள்ளது.  7 பேரின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது முதல்வரின் முடிவு.  7 பேர் விடுதலைக்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

po

 

எனது மகனை என்னுடம் சேர்த்து வைப்பார் முதல்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  பேரறிவாளன் விரைவில் சிறையில் இருந்து வருவார் என்று முதல்வர் எனக்கு ஆறுதல் கூறினார்.  அதற்கு ஆளூநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.  

 

pmk

 

7 பேரின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்ற அற்புதம்மாள்,    ’’7 பேரின் விடுதலைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  7 பேரின் விடுதலையை யாரும் அரசியலாக்க வேண்டாம்’’என்று வேண்டுகோள் விடுத்தார் .  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதையெல்லாம் கடந்து என் பையன் வந்தாச்சு''-அற்புதம்மாள் ஆனந்த கண்ணீர்!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

 '' My boy has come after all that '' - Arputhammal happy tears!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வேலூர் ஜோலார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், ''மனிதநேயம் உள்ள ஊடகங்களுக்கெல்லாம் நன்றி. இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ''நீண்ட நாளாக உங்களை புறக்கணித்ததற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்ன பேசுவது என்ற தடுமாற்றம் தான் என்னை தடுத்தது.இன்று முழுமையாக பேரறிவாளனை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் நன்றி சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில்  வந்துள்ளேன். 31 ஆண்டுகாலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறையில் கழிந்தது என உட்கார்ந்து யோசித்தால் அந்த வலி, வேதனை எவ்வளவு என்பது புரியும். அதை கடந்து வந்தாச்சு என் பையன். இந்த அரசு தொடர்ந்து பரோல் கொடுத்ததால் அவனின் உடல்நிலையை என்னால் கவனிக்க முடிந்தது. நான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன். எனது மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றி'' என்றார் ஆனந்த கண்ணீருடன்.  

 

 

Next Story

‘விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்...’- 7 பேர் விடுதலைக்கான மனிதசங்கிலி போராட்டம்

Published on 10/03/2019 | Edited on 10/03/2019
manithachangili


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரி அண்ணா சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.  இதில் புதுச்சேரி மற்றும் கடலூர்,  விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த த.வா.க,  த.பெ.தி.க, சிபிஐ, அ.ம.மு.க, வி.சி.க, தி.வி.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும்  பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


அப்போது தமிழக அமைச்சரவை தீர்மானப்படி தமிழக ஆளுநர் காலதாமதம் செய்யாமல் 7 பேரின் விடுதலை கோப்பில் கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்திய போராட்டக்காரர்கள், இல்லையெனில் இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றனர்.