Skip to main content

''ஊடரங்கில் செல்ஃபோனில் மூழ்கிவிடாதீர்கள்...'' வீடுதேடி புத்தகம் கொடுக்கும் செல்ஃபோன் கடைக்காரர்!  

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

'' Do not immerse yourself in the cell phone in the media ... '' Cell phone shopkeeper who gives books to search the house

 

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலரும் பயனுள்ள வேலைகளை செய்து வந்தாலும் இளைஞர்கள், மாணவர்கள் செல்ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். கேம்ஸ்கள் அவர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. இப்படி செல்ஃபோன்களில் மூழ்கியுள்ள இளைஞர்களை மீட்பதே பெரிய கடினமான செயலாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செல்ஃபோன் கடை நடத்தி வரும் செம்பாளூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சதீஷ்குமார் (31). தனது கிராம இளைஞர்கள் மாணவர்கள் செல்ஃபோனில் மூழ்கி வாழ்க்கையை வீணாக்கிவிடக் கூடாது என்பதற்காக வீடு வீடாக சென்று பொது அறிவு, அரசியல், வரலாறு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், இலக்கியம், நாவல், சிறுகதைகள் என பல்வேறு வகையான புத்தகங்களை கொடுத்து ஊரடங்கு காலத்தில் நிறைய படியுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிறார்.

 

'' Do not immerse yourself in the cell phone in the media ... '' Cell phone shopkeeper who gives books to search the house

 

இதுகுறித்து சதீஷ்குமார் நம்மிடம் கூறும்போது, ''நான் கல்லூரியில் படிக்கும் போதே புத்தகஙகள் மீது அதிக ஆசை உண்டு. நிறைய புத்தகங்கள் வாங்கி படித்தேன். அந்த புத்தகங்களை வீட்டிலேயே வைத்திருந்தேன். சென்னை போனால் நிறைய புத்தகங்கள் வாங்கி வருவேன். இப்படி வாங்கி வந்த புத்தங்களை எங்கள் வீட்டு மாடியில் "செம்மொழி வாசிப்பகம்" என்ற பெயரில் தனி நூலகமாக அமைத்தேன். புத்தகம் வாசிப்பதில் ஆர்வமுள்ள பலர் என் நூலகத்திற்கு வந்தார்கள். நிறைய புத்தம் படித்தார்கள் பல இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் கேட்டார்கள் வாங்கி வைத்திருக்கிறேன். இதையறிந்த சில நண்பர்களும் போட்டித் தேரவுகளுக்கான புத்தகங்கள் வாங்கித்தர முன்வந்துள்ளனர்.

 

தற்போது கரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பலர் செல்ஃபோன்களில் மூழ்கி கேம்ஸ் விளையாடி நேரத்தையும் வீணடிக்கிறார்கள். மேலும் பலர் உறவுகள், பசியை கூட மறந்து விளையாடுகிறார்கள். இவர்களை செல்ஃபோன்களில் இருந்து மீட்க வீடு வீடாகச் சென்று புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்கிறேன். ஆர்வமாக புத்தகங்களை வாங்கி படிக்கிறார்கள். அடுத்து கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படித்த இளைஞர்களுக்கு உள்ளூர் இளைஞர்களை வைத்தே போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்த திட்டமிட்டுள்ளேன். மேலும் மாணவர் சேர்க்கை இல்லாத அரசுப் பள்ளிகளை மீட்க இளைஞர்கள் பொதுமக்களிடம் பேசிவருகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.