Skip to main content

“அரசு மருத்துவர்களின் வயிற்றில் அடிக்காதே!” -இதுவரை போராடாத டாக்டர்களும் களத்தில்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

விருதுநகர் எம்.எஸ்.பி.நாடார் அரசு மருத்துவமனை முன்பாக,  ‘காலவரையற்ற வேலை நிறுத்தம்..  தொடர் போராட்டம்..’ என்ற பேனரின் கீழ், அவசர சிகிச்சைகள் மற்றும் காய்ச்சல் பிரிவு செயல்படும் என்ற அறிவிப்போடு, அரசு மருத்துவர்கள்  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

“Do not hit the stomach of government doctors!”

 

‘இறங்கி வா.. இறங்கி வா.. தமிழக அரசே இறங்கி வா..
போராடும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற செவி கொடு.. செவி கொடு..
ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. அரசு மருத்துவர்களை ஏமாற்றாதே!
அடிக்காதே.. அடிக்காதே.. அரசு மருத்துவர்களின் வயிற்றில் அடிக்காதே!
நிறைவேற்று. நிறைவேற்று.. நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று!’
என்று கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் “அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, இங்கே விருதுநகர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாகவே போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் போராட்டமானது நோயாளிகளுக்கு நல்லமுறையில் சேவை செய்வதற்காகத்தான். சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகத்தான் விருதுநகரிலும் போராட்டம் நடத்துகிறோம். கடந்த 7 நாட்களாக எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடாமல் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் விசுவாசமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 10 சதவீத டாக்டர்கள்தான் நாங்கள். தற்போது தமிழக அரசு மருத்துவர் விரோத போக்கினை மேற்கொள்வதால், போராடாமல் இருந்த 10 சதவீத டாக்டர்களையும் போராடும் நிலைக்கு அரசாங்கமே தள்ளியிருக்கிறது.

 

“Do not hit the stomach of government doctors!”

 

மருத்துவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே எங்கள் முதல் கோரிக்கை. இரண்டாவது கோரிக்கை,  நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். இரண்டு வருட காலமாக முறையாக பல வழிகளிலும் கோரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். முதுகலைப் படிப்பில் 50 சதவீத சர்வீஸ் கோட்டா வேண்டுமென்று. அதைத்தாண்டி சர்வீஸ் PG கவுன்சிலிங். முதுகலைப் பட்டம் படித்த அரசு மருத்துவர்களுக்கு  முறையான வெளிப்படையான கவுன்சிலிங் வைத்து இடங்களை நிரப்ப வேண்டும், எதுவுமே பண்ணாமல், பத்து வருட சர்வீஸில் இருக்கிறவர்களைக்கூட டைரக்ட் போஸ்டிங் என்று சொல்லி, மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்களை, அதனைச் செய்யவிடாமல் பண்ணுகிறார்கள். பணிச்சுமை ஒருபக்கம்.. கவுன்சிலிங் டைரக்டா நடத்தாமல் போனதால் ஏற்படும் விளைவுகளால் எளிய மக்களுக்கு சிகிச்சை தர முடியாத அளவுக்கு அரசாங்கம் எங்களைத் தள்ளிவிட்டது.  போராடும் மருத்துவர்களை சுகாதாரத்துறை அமைச்சரும் முதலமைச்சரும் அழைத்து கலந்துபேசி சுமுகமான ஒரு முடிவு எடுத்து அரசு மருத்துவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.” என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .