Skip to main content

உணவுக்காடு அமையுங்கள்..தைல மரங்கள் வேண்டாம்!! வனவிலங்குகளுக்காகப் போராடும் கிராம மக்கள்!!!!

Published on 26/08/2018 | Edited on 27/08/2018

பல்லுயிர் பெருக்கத்திற்குத் தேவையான உணவுக்காடுகளை அமையுங்கள்.! தைல மரங்கள் எனப்படும் யூகலிப்டஸ் மரங்களை இங்கு நட வேண்டாம்.! இதனால் நீர் ஆதாரங்களும், வனவிலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது", என தைலமரங்களை நடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டுள்ளனர்.

 

PROTEST

 

 

 

வனத்தோட்டக் கழகத்தால் விளைவிக்கப்படும் தைல மரங்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளன. மரங்கள் பயிடப்பட்ட இடங்களை சுற்றி அகழிகளைத் தோண்டி பாத்திக் கட்டி உழவு செய்வதால் கண்மாய், குளம், குட்டைக்கு செல்ல வேண்டிய மழை வெள்ளம் இங்கேயே தங்கிவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இவ்வேளையில், " நீராதாரங்களை அழித்தது மட்டுமில்லாமல், வனவிலங்குகளையும் அழித்து வருகின்றது இந்த தைல மரங்கள். இதனை இங்கு நடக்கூடாது என உழுது செம்மைப்படுத்தியுள்ள இடங்களையொட்டிய தைலக்காடுகளில் புகுந்து சுமார் 250 பெண்களுடன் இணைந்து ஏறக்குறைய 500 ஆண்களுமாக சேர்ந்து காலையிலேயேப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள நாகவயல் கிராமத்தினர்.

 

PROTEST

 

 

 

"தங்குவதற்கும், தின்பதற்கும் ஏற்றதல்ல இந்த மரங்கள். வெம்மையை மட்டும் உற்பத்தி செய்யும் இந்த தைல மரங்களில் எந்தவொரு பறவையும் கூடு கட்டாது. வசிக்காது. இனப்பெருக்கமும் செய்யாது.! வனத்துறையின் முக்கியக் கடமையே வனத்திலுள்ள உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே.! சிவகங்கை மாவட்டத்திலுள்ள காடுகளில் தான் எங்கும் இல்லாமல் மான்கள் அதிகமாக வசிக்கின்றது. அத்தி, ஆலம், இலுப்பை, பலா, வேங்கை, சீதா, நாவல் பழ மரங்கள் உள்ளிட்ட மரங்களால் தான் அவைகள் அங்கேயே இரை தேடி பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக இருந்து வந்தது. இப்பொழுது அத்தனை மரங்களையும் அழித்துவிட்டு தைலமரங்கள் நடுவது என்ன லாபம்..? இதனால் மான்கள், குரங்குகள் உள்ளிட்டவைகள் காட்டை விட்டு வெளியில் வந்து நாய் கடித்தோ, வாகனத்தில் அடிப்பட்டோ இறக்கின்றன. தைல மரங்களை புறக்கணித்துவிட்டு உணவுக்காடுகளை அமையுங்கள். இதனால் நம்முடைய சந்ததிகள் வளரும். இல்லையெனில் தைலமரங்களை நடவிட மாட்டோம்." என பேச்சு வார்த்தையைத் தொடங்க வந்த காவல்துறை, வருவாய்துறை மற்றும் வனத்துறையினரிடம் பேசி வருகின்றனர் கிராம மக்கள். இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.