ADVERTISEMENT

7 பேர் விடுதலையில் ஆளுநருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்காது!!-பொன்.ராதாகிருஷ்ணன்!!

04:17 PM Nov 04, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்காது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி ஆற்றூரில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் சட்டப்படி ஆளுநர் முடிவெடுப்பார். 7 பேரை விடுதலை செய்வது குறித்த செயல்களில் ஆளுநருக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் மத்திய அரசு சார்பில் தர முடியாது.

சபரிமலையில் பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் கேரள அரசு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT