Skip to main content

சாதி சான்று கிடைக்கல மேல்படிப்பு படிக்க முடியல; வேதனையில் மலைவாழ் மக்கள்!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

சீர்காழி பகுதியில் சாதிச்சான்று பெறமுடியாமல் உயர்கல்வியைத் தொடர முடியாமல், 110 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தவிக்கின்றனர்.

 

poor

 

 

 

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஐந்தாவது கிலோமீட்டரில் உள்ளது அரசூர் கிராமம். அங்கு ஒதுக்குப்புறமாக ஜெ.ஜெ. நகர் என்கிற பெயரில் 36 வீடுகளில் 110  குடும்பத்தினர்  வசிக்கின்றனர்.

 

ஆரம்ப காலத்தில் வீதி வீதியாக சென்று, வீடுகளுக்கு வீடு சென்று மேளம் அடித்தும், மாடுகளை கொண்டு வித்தை காட்டி பிழைப்பு நடத்திவந்தனர்.  காலப்போக்கில் அதில் இருந்துமாறி பொம்மைகள் செய்து விற்பனை செய்வதும், பிளாஸ்டிக் பொருள்களை வாங்கிவந்து விற்கும் பிழைப்பு நடத்துகின்றனர்.

 

மலை சாதிமக்கள் என்று அழைக்கப்படும் அவர்களுக்கு அரசுசார்பில் இலவச வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. 10 பேருக்குமட்டும் இலவச கான்கிரீட்வீடுகளை கட்டிக்கொடுத்தனர். அந்த வீடுகளும் தற்போது  இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன.

 

 

 

கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு  அன்றாட வாழ்க்கையை நகர்த்துகின்றனர். அங்குள்ள சிறுவர்கள் 5-ஆம் வகுப்பு வரை அருகில் உள்ள மணலகரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும், திருச்சிற்றம்பலத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியிலும் பயில்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்,  தொடர்ந்து படிக்க நினைத்தாலும், 12-ஆம் வகுப்புக்குமேல் கல்வியைத் தொடரமுடியாமல் உயர்கல்விக்கு முழுக்கு போட்டுவிடுகின்றனர். அதற்கு காரணம்,  அவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பது தான்.

 

 

அவர்களுக்கான சாதிச்சான்றை வருவாய் கோட்டாட்சியர் தான் வழங்க வேண்டும். ஆனால், இதுவரை சாதிச்சான்று கிடைக்கவில்லை,கடந்த 2 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நான்கு பேர் உயர்கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர். உடனே அவர்களுக்கு சாதி சான்று கிடைக்க செய்ய அரசு முன்வரவேண்டும்என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

சார்ந்த செய்திகள்

Next Story

சீர்மரபினர்களுக்கு முக்கிய அறிவிப்பு; தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Important order issued by the Chief Minister of Tamil Nadu for denotified communities

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு, Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப் பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு 6T60T வகைப்படுத்தப்பட்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், அரசாணை (நிலை).26. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் 20 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் எனவும் ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றைப் பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி இனி வருவாய் அலுவலர்கள், வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'சாதி, மதம் இல்லை' சான்றிதழ் பெற்ற தம்பதிக்கு குவியும் பாராட்டு! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Congratulations to the couple who got the certificate without any caste or religion!

 

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் வாங்கிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

 

தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அவரது மனைவி சர்மிளாவும் சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், அதற்கான சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரை ஏழு பேர் சாதி, மதம் இல்லாதவர்கள் என்ற சான்றிதழ் பெற்றிருக்கும் நிலையில், அதில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

 

தங்களைப் போன்று தங்களது குழந்தைகளுக்கும் சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் கிடைக்க விண்ணப்பிக்க இருப்பதாக கார்த்திகேயன் தெரிவித்தார்.