Skip to main content

'பணிநிரவல் ஊழியர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க கூடாது...' அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிச் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 4500-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் மூன்றாண்டு ஒப்பந்த காலம் விரைவில் முடிவடைகிறது.

இந்தநிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் நலச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஏ பன்னீர்செல்வம் நிர்வாகிகள் யாதவ சிங் கோவிந்தராஜ் வேல்ராஜ் சோழன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

 'Do not extend the contract period of the workforce ...'


கூட்டத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை தமிழக அரசின் மருத்துவக் கல்லூரியாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி மூன்றாண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பல்கலைக்கழக சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையே பணியாற்றி வருகிறார்கள். அதனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி ஒப்பந்தத்தை நீட்டிக்க கூடாது. அவர்களை மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கே அழைத்துக் கொள்ள வேண்டும். பணி நிரவலால் மன உளைச்சல் அடைந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலையும் நிவாரணமும் அரசு வழங்க வேண்டும்.

இதுகுறித்து பணி நிரவல் ஊழியர்கள் நலச்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் அவர்களுக்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அதனால் தமிழக அரசு அவர்களது பணிக்கால ஒப்பந்தத்தை மீண்டும் நீட்டிக்காமல் 3 ஆண்டுகள் முடிவடைந்தவுடன் பல்கலைக்கழகத்திற்கே திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இதுபற்றி அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறும் நிர்வாகிகள் அரசு இதைச் செய்யத் தவறினால் அடுத்த கட்டமாக சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.