என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை அதிமுகவருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில்எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ,அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதை அப்படியே சட்டப்பேரவையில் பதிவு செய்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என பேசினார்.

 Do not create tension like Delhi in Tamil Nadu - Edapadi Palanisamy

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதற்கு பதிலளித்த முதல்வர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தைஎதிர்த்துதீர்மானம் நிறைவேற்றவில்லை.மக்களிடம்ஒரு அச்சத்தைதொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.அமைச்சர்கள் சிறைக்கு செல்வீர்கள் என்ற அச்ச உணர்வைஏற்படுத்தும் விதமாக திமுகவினர் பேசி வருவதாகஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

மேலும் பேசிய அவர், என்பிஆர் விவகாரத்தில்சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தைஏற்படுத்தக்கூடாது. எந்த இடத்தில் என்ன பாதிப்பு என்பதைசொல்லாமல், அமைதியாக இருக்கும்தமிழகத்தில்டெல்லியைப் போன்று பதட்டத்தை உண்டாக்கவேண்டாம். என்பிஆர் விவகாரத்தில்அச்சத்தைஏற்படுத்தாமல் உண்மைகளை மக்களுக்குஎடுத்து சொல்லுங்கள். சட்டப்பேரவைக்குள் ஒன்று பேசி, வெளியே சென்றுவேறுமாதிரியாகஎதிர்க்கட்சிகள் பெரிதாக்க கூடாதுஎன்றார்.