Skip to main content

'பெற்றோர்களிடம் நிதி வசூல் கூடாது...'-மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

ias

 

கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சில அறிவுத்தல்களுடன் கூடிய உத்தரவை கடிதம் வாயிலாக பிறப்பித்துள்ளார்.

 

அதில், 'தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்காக பள்ளிகள் வரும் ஜூன் 13 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகங்களைத் தூய்மைப்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க உரிய சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய காரணத்திற்காக பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் எந்த நிதியையும் வசூலிக்கக்கூடாது. குறிப்பாக வகுப்பறையில் உள்ள கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசுதல், நாற்காலிகளுக்கு வண்ணம் பூசுதல், விளையாட்டு மைதானங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் மீண்டும் ஜூன் 13 ஆம் தேதி பள்ளி வளாகத்திற்கு வரும்பொழுது பள்ளி கல்வி கற்பதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலை உள்ள இடமாக இருக்க வேண்டும். பள்ளிகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட விவரங்களை சேகரித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.