Skip to main content

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிக நிர்வாகிகள்;விரட்டி விரட்டி கைது செய்த போலிஸ்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் களத்தில் நிற்கிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், இந்தியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசி, ஐ.ஜே.கே, கொங்கு கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி தனது கூட்டணி இறுதியாகிவிட்டது என அறிவித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதியதமிழகம், புதியநீதிக்கட்சி என சில கட்சிகளோடு கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது.

 

திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும், விஜயகாந்த் தின் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தன. அந்த கட்சி யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடனே கூட்டணி எனச்சொல்லி வந்தது. இதனால் இழுப்பறி இருந்துவந்தது. இந்தநிலையில் தான் 4 தினங்களுக்கு முன்பு எங்கள் கூட்டணி இறுதியாகிவிட்டது என அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 

DMMK MEMBERS ARREST IN VELLORE

இதனால் தேமுதிகவின் நிலை தாழ்ந்தது. திமுக அறிவிக்கும்வரை தேமுதிகவுக்கு 6 சீட் என சொல்லி வந்த அதிமுக, திமுக கூட்டணி கதவை சாத்தியதும், தேமுதிகவுக்கு வேறுவழியில்லையென 3 சீட்டாக குறைத்தது. இதனால் தேமுதிக தலைமையான விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் அதிர்ச்சியாகினர்.

 

இந்நிலையில் மார்ச் 6ந்தேதி சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை சேர்ந்தவரும், பிரதமருமான மோடி வந்துயிருந்தார். அன்று விஜயகாந்த் மோடியுடன் மேடையேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் நிகழ்ச்சிக்காக மேடையில் வைக்கப்பட்ட பேனரில் விஜயகாந்த் படம் பொறிக்கப்பட்டது.

 

அதே நாளில், திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செல்போனில் பேசி, உங்களுடன் கூட்டணிக்கு வருகிறோம், அதுப்பற்றி எங்கள் கட்சி நிர்வாகிகள் சேலம் இளங்கோவன், அனகை முருகேசன் உங்களை வந்து சந்திப்பார்கள் எனச்சொன்னார். அதன்படி அவர்கள் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

 

அதே நேரத்தில் சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை, சுதிஷ் சந்தித்து சீட் பேரம் நடத்தினார்.

 

தங்களை வைத்து தேமுதிக சீட் பேரம் நடத்துகிறது என்பது உணர்ந்த துரைமுருகன், தேமுதிக எங்களுடன் கூட்டணிக்கு வர துடிக்கிறது என்பதை போட்டு உடைத்தார். இதனால் தேமுதிக தலைமை அதிர்ச்சியானது.

 

தேமுதிகவின் செயலால் அதிர்ச்சியான பாஜக, அதிமுக போன்றவை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மோடியின் பிரச்சார மேடையில் வைக்கப்பட்டுயிருந்த பேனரில் இருந்து விஜயகாந்த் படத்தை அவசரம் அவசரமாக எடுத்துவிட்டனர். மோடி வந்து சென்றபின், பாஜகவினர், பிரேமலதா, சுதிஷ்சை கடுமையாக பேசியுள்ளனர்.

 

இதனால் மார்ச் 7ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த சுதிஷ், இளங்கோவன், அனகைமுருகேசன், தனிப்பட்ட விவகாரங்களுக்காக துரைமுருகனை சந்தித்தோம் என்றார்கள். துரைமுருகன், தனது கட்சி தலைமை குறித்து என்னவெல்லாம் என்னிம் பேசினார் தெரியும்மா?, அதை வெளியில் சொன்னால் அவருக்கு தான் அசிங்கம் என்றார். சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்ப, சந்திப்பை அவசரம்மாக முடித்துக்கொண்டு கிளம்பினார்.

 

திமுக, தங்கள் பேர அரசியலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி, தங்களை அம்பலப்படுத்தியதை பிரேமலதா, சுதிஷ்சால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வேலூரில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம், துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துங்கள் என்றனர்.

 

DMMK MEMBERS ARREST IN VELLORE

 

அதன்படி மார்ச் 8ந்தேதி காலை 10 மணியளவில் வேலூர் காட்பாடி, காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டை தேமுதிக நிர்வாகிகள் 20 பேர் கட்சி கொடியுடன் சென்று முற்றுகையிட முயன்றனர். அனுமதி பெறாமல் ஒருவரின் இல்லத்தை எப்படி முற்றுகையிடலாம் என காட்பாடி போலிஸார், தேமுதிகவினரை விரட்டியடித்தனர். அவர்கள் போகாமல் துரைமுருகன் ஒழிக, ஒழிக என கோஷமிட்டனர். அவர்களை முன்னேற விடாமல் போலிஸ் தடுத்ததால் வேலூர் – சித்தூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் கோபமான போலிஸார், காலை நேரத்தில் மறியல் ஈடுப்பட்டதால் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் பயந்துப்போன தேமுதிகவினர் சிலர் அங்கிருந்து ஓட முயன்றனர். ஆனால், அவர்களை விடாமல் போலிஸார் துரத்தி, துரத்தி கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.

 

இதில் ஒரு கூத்து என்னவென்றால், துரைமுருகன் வீட்டை முற்றுகையிடப்போகிறோம் வாருங்கள் என தொண்டர்களுக்கு போன் செய்து அழைக்க, யாரும் வராததால் நொந்துப்போய் தாங்களே சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.