





Published on 31/05/2021 | Edited on 31/05/2021
இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல சாலையோர மக்களும், ஆதரவற்ற மக்களும் உணவின்றி பெரிதும் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். நோய் பரவலின் தாக்கம் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பசியினால் பலரும் அவதிப்படுகின்றனர்.
இதனை அறிந்த அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார்கள். அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் சேப்பாக்கம் தொகுதி திமுக இளைஞரணி சார்பில் சாலையில் உள்ளவர்களுக்கு உணவுகளை வழங்கினர்.