டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் 5- ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாநில கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனத்தைத் தெரிவித்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியில் மாணவர் சங்கத் தலைவர் ஐஷி கோஸை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். ஏற்கனவே டெல்லி ஜே.என்.யு மாணவர்களை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.