Skip to main content

“இது திமுக; ஜல்சா கட்சி கிடையாது” - வானதி எம்.எல்.ஏக்கு பதிலடி தந்த பெண்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

DMK Woman comment to Vanathi Srinivasan MLA's Latest speech

 

திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் இந்த வருடம் முழுக்கக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், வடசென்னை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த கலைஞர்100 கொண்டாட்டக் கூட்டத்தில் பேசிய அன்றைய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்பு குறித்து சில அவதூறு கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

குஷ்பு குறித்து சர்ச்சை பேச்சு; சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

 

இதற்கு குஷ்பு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும், கைது செய்யப்பட்டார். 

 

இந்நிலையில், சமீபத்தில் கோவையில் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பற்றி மிகவும் தரக்குறைவான விதத்தில் பேசி இருந்தார். வானதி ஸ்ரீனிவாசனின் அந்த பேச்சில், ‘திமுக கவுன்சிலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள். அவர்கள் ஒரு வீட்டில் இருக்கமாட்டார்கள். திமுகவில் இதை ஒரு பண்பாடாகவே செய்து வருகிறார்கள்’ என்று மிக மோசமாகப் பேசி இருந்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பற்றிய இந்த ஆதாரமற்ற மலினமான பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழும்பியுள்ளன. 

 

DMK Woman comment to Vanathi Srinivasan MLA's Latest speech

 

‘ஒரு கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் சாதனைகளைப் பற்றி பேச வேண்டும். ஆனால், அந்த கட்சிக்கு என்று எந்த சாதனைகளும் இல்லை என்பதால் அந்த கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கூட அடுத்த கட்சியைப் பற்றிய அவதூறை பேச வேண்டிய நிலைமை ஏற்படுகிறது’ என்று பாஜக வானதி ஸ்ரீனிவாசனுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். 

 

DMK Woman comment to Vanathi Srinivasan MLA's Latest speech

 

அதேசமயம் திமுக ஆதரவாளர் ஒருவர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வானதி ஸ்ரீனிவாசனுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “எல்லாரையும் உங்களைப் போல் நினைத்துவிடக்கூடாது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக நீங்கள் என்ன போராட்டத்தை நடத்தினீர்கள். உங்கள் கட்சியில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், நீங்கள் முதல்வரை அணுகலாம். அவர் கண்டிப்பாக உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார். அதை விட்டுவிட்டு எங்கள் திமுக சகோதரர்கள் குறித்து இப்படி அவதூறு பரப்பினால் நிச்சயமாக அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது திமுக; ஜல்சா கட்சி கிடையாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.