Skip to main content

'25 இலட்சம் முடிச்சாச்சுன்னு  தலைவர்  கிட்ட சொன்னேன் பத்தாதுன்னு சொல்லிட்டாரு'-  உதயநிதி கலகல பேச்சு...!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணிச் சார்பில் இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கரூர் சி.எஸ்.ஐ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 

dmk uthayantihi speech


இதில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி பேசும் போது.. இந்திய அரசியல் இயக்கங்களில் அதிக இளைஞர்களை இலட்சோப லட்ச வீரர்களை கொண்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.  கடந்த ஆண்டு இதே மாதம் மூன்றாம் தேதி இதே சிஎஸ்ஐ விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றார்கள். அந்த மேடைகளில் பேசி கழக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பேசுகின்ற பொழுது அடுத்த ஆண்டு இங்கே  நடைபெறுகின்ற நிகழ்ச்சியின் பொழுது இளைஞரணிச் செயலாளராக வர வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்கள் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. கடந்த வாரம் ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்தியது.

 

dmk


இங்கே இருக்கும் தம்பிமார்கள் வருகின்ற சட்டமன்றதேர்தல் தான் அடுத்து வருகின்ற தேர்தல் இந்த தேர்தலின் போது ஒவ்வொரு இளைஞனும் தங்களுடைய பங்களிப்பை கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும். நம்மால் நிச்சயம் ஒவ்வொருத்தரும் பத்து வாக்குகளை கழகத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு நம்மால் பெற்றுத்தர முடியும் வந்திருக்கக்கூடிய தம்பிமார்கள் ஒவ்வொருவரும் தன்னால் பத்து வாக்குகளை  நான் உதயசூரியன் சின்னத்திற்கு பெற்றுத்தர பாடுபடுவேன் என்ற உறுதியை இந்த இளைஞர் அணிக் கூட்டத்திலே அன்பிற்குரிய இளைஞரணிச் செயலாளர் முன்னிலையில் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,

 


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன், கருணாநிதியின் பேரன் என்பதை விட எனக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி பெரியதல்ல. எப்போதும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டரில் ஒருவராக இருந்தே நான் செயலாற்ற விரும்புகிறேன்.

என்னைப் பிரித்து பார்க்காமல் இளைஞரணியினர்தான் ஒருங்கிணைந்து எனக்கு வழிகாட்ட வேண்டும். 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணியில் சேர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதில் 25 லட்சம் சேர்ந்து விட்டதை, தலைவர் ஸ்டாலினிடம் கூறினேன். அப்போது அவர் பாராட்டு தெரிவிக்கவில்லை. மாறாக 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுகோள் விடுத்தார்.

செந்தில்பாலாஜி என்னை அண்ணன் என்றார். என்னை விட 3 வயது மூத்தவர் அவர். அவரை இளைஞர் அணியில் சேர்த்துக்கொள்கிறோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள், ஆனால் ஓரே கல்லில் பல மாங்காய் அடிப்பவர் செந்தில்பாலாஜி. கடந்த முறையே என்னை ஒரு நாள் முழுக்க வச்சு  செஞ்சுட்டார். இப்பவும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ண சொன்னேன். ஆனா தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திட்டார். எல்லோரையும் உறவு முறை வைத்து அழைக்கிறார். ஒரு மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் அவர் தான்.

அதனை நோக்கி நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 42 ஆயிரம் பேர் இளைஞரணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். இளைஞரணி என்பது அரசியலுக்கானது மட்டும் அல்ல. மாறாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது, குளம் தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாப்பது, மரக்கன்று நடுவது போன்ற சமூக மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முதல் கட்ட போராட்டத்தை இளைஞரணி முன்னெடுத்து சென்றது. தற்போது டெல்லியில் அமைதியாக போராடியவர்கள் மத்தியில் வன்முறை வெடித்து 50 பேர் இறந்து உள்ளனர். இதற்கு பிரதமர் மோடி ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.


 

dmk

 

பிரதமர் என்கிற அடிப்படையில் இந்தியாவையே மோடி கட்டுக்குள் வைத்திருந்தாலும், தமிழக மக்களின் ஆதரவு எப்பவுமே எங்க டாடிக்கு தான். இதே எழுச்சியுடன் இளைஞரணியினர் வருகிற 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானதும் மக்களின் தேவையை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இரவு பகலாக படித்து அரசு வேலைக்குச் சென்றால் வாழ்வு கிடைக்கும் என பலர் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் தற்போது டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு முறைகேடு அம்பலமாகியுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது. கரூரில் நடந்த அட்டூழியத்தால் வெற்றி பறிபோயிருக்கிறது. இதற்காக துவண்டு விட வேண்டாம். சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக கரூர் வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மண்மங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்கு மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் கரூர்-கோவை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் கரூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடந்த குதிரை வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.