DMK Tirupur District Officer Appointed!

தி.மு.கசார்பில் தேர்தல் பணிக்காகவும் அக்கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் திருப்பூர் மாவட்டத்தை நான்காகப் பிரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி திருப்பூர் மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களும் தி.மு.கசார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

திருப்பூர் மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக க.செல்வராஜ், வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இல.பத்மநாபன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக மு.பெ.சாமிநாதன் மற்றும் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இரா.ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment