Skip to main content

பெண்கள் பாதுகாப்பு நாள் கொண்டாட எடப்பாடி அரசுக்கு தகுதி இல்லை -நக்கீரன் ஆதாரத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு!!

Published on 23/02/2020 | Edited on 25/02/2020

மதுரையில் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் தனது ஆதரவாளர்கள் பல்லாயிரகணக்கானோருடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். விழா மேடையில் ராஜ.கண்ணப்பன் கலைஞர் அறக்கட்டளைக்கு 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை ஸ்டாலினிடம் வழங்கினார். 

இந்த விழாவில், பொள்ளாச்சி சம்பவத்தில் வீடியோக்கள் பல லட்சக்கணக்கில் பணம் விளையாடி வருகிறது . இந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சம்பந்தப்பட்டிருக்கார் என (நக்கீரன் ஆதாரத்தை சுட்டிக்காட்டி) நேரடியாக குற்றம் சாட்டுகிறேன். பொள்ளாச்சியில் 250 பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை நான் சும்மா விட மாட்டேன் என ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். 

 

DMK STALIN SPEECH IN MADURAI

 

இந்த விழாவில் தி மு க தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:,

சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரையில் விழா நடந்து கொண்டு உள்ளது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கூறும் தலைநகரில் இந்த விழா நடக்கிறது. இந்த விழா வரும் காலத்தில் நமது வெற்றியை எதிரொலித்து வருகிறது.

ராஜ.கண்ணப்பன் என்னிடம் வந்து தேதி கேட்டார். திமுகவில் இணைய தேதி வேண்டும் என கேட்டார். தற்போதும் இந்தக் கட்சியில் தானே இருக்கிறீர்கள் என கேட்டேன். அவர் முக்கியமான நேரத்தில் வந்து சேர்த்துள்ளார். ராஜகண்ணப்பன் ஒரு தனி நபர் அல்ல.  அவரிடம் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். திமுக என்பது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். அவர்களுக்காக வாதாடும் இயக்கம் தி.மு.க ஆகும்.என்றார் மேலும் பேசுகையில்,

 

DMK STALIN SPEECH IN MADURAI


ஹைட்ரோகார்பன் கிணறுகளை மூடாமல் எவ்வாறு வேளாண் மண்டலத்தை அமல்படுத்துவீர்கள். விவசாயி அவதாரம் எடுக்கும் எடப்பாடி, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், போன்ற திட்டங்களில் விவசாயிகளை பாதிக்க விடுகிறார். மத்திய அரசிடம் மண்டியிட்டு, எடப்பாடி விருதுகளை வாங்கி வருகிறார். 3 லட்சம் கோடியை முதலீட்டை பெற்றதாக கூறும் எடப்பாடி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?

8 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் அ.தி.மு.க.வில் செய்த அட்டுழியம் செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையிலும், சிறிது நாளிலேயே விடுவிக்கட் பட்ட அவலம் நடந்தது. அது தான் இந்த ஆட்சியின் அவலம் தான். இந்த எடப்பாடிக்கு தகுதி இருக்கிறதா, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி பதிவான வழக்குகளில் 13 சதவீதத்தில் தான் தீர்வு காணப்பட்டுள்ளது என கூறுகிறது.

 

DMK STALIN SPEECH IN MADURAI

 

தற்போது இந்த லட்சணத்தில் பெண் பாதுகாப்பு குறித்து பேச இவர் களுக்கு தகுதி உள்ளதா? இவர்கள் ஆட்சியில் பொள்ளாச்சி ஊர் பெயரை சொல்ல முடியுமா? என்னிடம் 2 பெண் காவலர்கள், தனது ஊர் பெயரை சொல்லக் கூட வெட்கப் படுகின்றனர். எடப்பாடிக்கு ஊழல், லஞ்சம், துப்பாக்கி சூட்டிற்கு, குட்கா விற்கு விருதுகள் வழங்கலாம், ஓ பிஎஸ், மீது சொத்து குவிப்பு வழக்கு, விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு, எடப்பாடி மீது கொலை, கொள்ளை வழக்குகள உள்ளன.

வேளாண் மண்டலம் அறிவித்துள்ளீர்களே அங்குள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகள் என்ன ஆகும். எப்படி இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்துள்ள உங்களுக்கு ஒரு கட்டளையை தெரிவிக்கிறேன். தற்போது எடப்பாடி அரசு 2 வேலைகள் செய்கிறது கடன் வாங்குகிறது, அதனை கொள்ளையடிக்கிறது.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளபோது. கடன் தொகை உயர்ந்துள்ளதாக அவர்களே அறிவித்துள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் 1 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 4.65 கோடியாக உயர்ந்துள்ளது. சாமானியன் வீட்டுப் பிள்ளை கலைஞர் இந்த கட்சியை வழி நடத்தி வந்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தியது. காவேரி ஆணையம் பெற்றுத் தந்தது , உள்நாட்டு விமான நிலையத்திற் காமராஜர் பெயர் வைத்தது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நீண்ட நெடிய சாலைகள், செல்போன் பாமரர்  கையில் வந்ததும் திமுகவின் சாதனை ஆகும். இந்த சாதனை கட்சியில் நீங்கள் வந்து சேர்ந்துள்ளீர்கள்.


 

DMK STALIN SPEECH IN MADURAI

 

மேலும்,கடன் வாங்கி, கடன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர். இதனை தவிர வேறு எந்த சாதனை எதுவும் இல்லை. ஜெயலலிதா அம்மையார் குறித்து அமைச்சர்கள் நினைப்பதில்லை. 3 ஆண்டு கழித்து தற்போது ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என பெயர் வைத்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் பணி புரிந்த ஜெயஸ்ரீ என்ற பெண் அதிமுக வைத்த பேனர் விழுந்து இறந்த போது, அதிமுகவினர் சென்று பார்க்க வில்லை. ஆறுதலோ, நிதி யோ வழங்கவில்லை. ஆனால் தற்போது அதிமுகவினர் பெண்கள் பாதுகாப்பு என கூறுவது எப்படி ஏற்பது. மதுரையில் தமிழ்த்தாய் சிலை அமைப்பீர்கள் என்று சொன்னீர்களே? அது என்ன ஆனது.

எய்ம்ஸ் அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன.? 2015ல் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் 2017ல் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் பொது வழக்கு போட்ட பின் 4 மாதத்தில் அறிவுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் 2018 வரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் 2019ல் வெறும் கண்துடைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்பட வில்லை.

தற்போது எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அறிவிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட போர்டை கூட காணவில்லை. (அதற்காக ஒரு போட்டோவை காண்பித்தார்.) பொள்ளாச்சி சம்பவத்தில் வீடியோக்கள் பல லட்சக்கணக்கில் பணம் விளையாடி வருகிறது . இந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சம்பந்தப்பட்டிருக்கார் என நேரடியாக குற்றம் சாட்டுகிறேன்.  இந்த சம்பவத்தை திமுக ஆட்சிக்கு வந்தால், சும்மா விட மாட்டோம். எனவும் ஸ்டாலின் பேச்சு, நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் என்னாச்சு, 7 பேர் விடுதலை அறிவிப்பு தீர்மானம் என்னாச்சு, என்.பி.ஆர், என்.ஆர்.சி உங்களது நிலை என்ன.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.