'இதைத்தான் கலைஞர் எங்கள் ரத்தத்திலேயே ஊட்டி வளர்த்திருக்கிறார்' - புதிய பிரச்சார மேடையில் ஸ்டாலின் பேச்சு 

dmk stalin

திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'என்ற புதிய பெயரில் தேர்தல் பரப்புரையை திருவண்ணாமலையில் இன்று (29.01.2021) திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார்.

அப்பொழுது மேடையில் பேசிய ஸ்டாலின், ''ஒரு சம்பவம் நடந்தவுடனே அந்த இடத்திற்குப் போக வேண்டும், மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என என்மனம் துடிக்கிறதென்றால் அதற்கு முழு காரணம் கலைஞர்தான்.தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ளவர்களும் இப்படிதான் இருக்க வேண்டும் என கலைஞர் விரும்பினார்.அப்படிதான் எங்களையெல்லாம்வளர்த்தார். ‘மக்களுக்கு உண்மையாக இரு’ இதைத்தான் கலைஞர் எங்கள் ரத்தத்திலேயே ஊட்டி வளர்த்திருக்கிறார்'' என்றார்.

election campaign stalin
இதையும் படியுங்கள்
Subscribe