Skip to main content

எது வளர்பிறை? எது தேய்பிறை? சராசரி அறிவுகூட இல்லையா... ஸ்டாலின் கடும் தாக்கு!

Published on 05/01/2020 | Edited on 06/01/2020

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (5.1.2020) 10 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள, ''கலைஞர் கணினி கல்வியகம்'' என்ற பெயரில் படித்த, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த மாணவிகள் 90 பேருக்கு கணினி பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அதேபோல் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலையும் திறந்து வைத்தார்.

 

DMK

 

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது, நமக்கு Equal- லா இருக்கிறார்களாம். யாரு, அதிமுகவுக்கு Equal- லா இருக்கிறார்களாம். அதாவது சரிசமமாக வெற்றி பெற்று வந்து கொண்டிருக்கிறார்களாம். இன்னும் இன்றைக்குக் கூட ஊடகங்களிலே செய்திகள்  வந்து கொண்டிருக்கிறது. 

நான் கேட்கிறேன் என்ன சரிசமம், தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இப்படித்தான் சொன்னார்கள். 40 இடங்களில் போட்டியிட்டோம். பாண்டிச்சேரியும் சேர்த்து 39 இடங்களில் வெற்றி பெற்றோம். அதாவது தேனித்  தொகுதியைத் தவிர்த்து, ஒரே ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 39 இடங்களிலே வெற்றி பெற்ற போதும் பெரிய வெற்றி என்று சொன்னார்களா? இல்லை. அதையும் மூடி மறைத்தார்கள். இப்பவும் என்ன சொல்கிறார்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளில், கிராமப்புறப் பகுதிகளில் ஆளுங்கட்சியை விட அதிகமான இடங்களில் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறோம். தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும்.

இதிலே அங்கிருக்கக்கூடிய அமைச்சர்கள் பேட்டிக்கொடுக்கிறார்கள். முந்திரிக்கொட்டை அமைச்சரும் பேட்டிக்கொடுக்கிறார்கள், யார் என்பது உங்களுக்கு தெரியும், நான் யார் என்று பெயரையெல்லாம் சொல்லி என்னுடைய கவுரவத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. "வளர்பிறையாம் நாம், அவர்கள் தேய்பிறையாம்" எது வளர்பிறை?, எது தேய்பிறை? இந்த சராசரி அறிவு கூட இல்லை ஒரு அமைச்சருக்கு என்பது தான் வேதனையாக இருக்கிறது.

 

DMK


நான் கேட்கிறேன். இன்றைக்கு ஒன்றிய கவுன்சிலை பொறுத்தவரைக்கும் திமுக வெற்றி பெற்று இருக்கக்கூடிய எண்ணிக்கை எவ்வளவு, ஒன்றிய கவுன்சிலை பொறுத்தவரைக்கும் 2100, தயவுசெய்து கணக்கு போட்டு பாருங்கள் முறையாக அறிவிப்பு வந்திருக்கிறது. அதேபோல் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக 1781, ஆக நாம வெற்றி பெற்றிருப்பது 2100, ஆளுங்கட்சி பெற்றிருப்பது 1781, எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது நமக்கு தெரியும் "தோற்றவர்களையெல்லாம் வெற்றி பெற வைத்தார்கள், வெற்றி பெற்றவர்களையெல்லாம் தோற்கடித்தார்கள் என்றார்."

 

Newstuff

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.