Skip to main content

சம்மட்டி அடியென்றால் இது அதிமுகவிற்கு 'மரண அடி'- ஸ்டாலின் பேட்டி 

Published on 11/12/2019 | Edited on 12/12/2019

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,

உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்ன என்பது முறையாக இன்னும் முழுமையாக வெளிவராத சூழ்நிலையில் ஊடகங்களில் பல்வேறு வகைகளில் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சில கட்சிகள் வழக்கு தொடுத்த காரணத்தால் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் எடுத்து வைத்த கோரிக்கை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என்ற அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருந்தோம்.

 

dmk stalin press meet

 

அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள். 2016 ல் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடுத்த நேரத்தில், அப்போதைய அரசு செயலாளராக இருக்ககூடிய அன்சராஜ் வர்மா ஒரு பிரமாண வாக்குமூலத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2016ஆம் ஆண்டிற்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் அதை மாற்றி 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகையை 2016ஆம் ஆண்டிற்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தவறாக இன்றைக்கு சொல்லியிருக்கிறார். எனவே இந்த முரண்பாட்டை உச்சநீதிமன்றம் உணர்ந்து இன்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது.

மேலும் தற்போது மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் முழு விவரத்தை, அதன் உணர்வை புரிந்து கொண்டு அரசியல் சட்ட அமைப்பை காப்பாற்ற முறையாக இந்த தேர்தல் நடத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 

இந்த தீர்ப்பு தேர்தலை தவிர்க்க முயற்சித்த திமுகவிற்கு கொடுக்கப்பட்ட சம்பட்டி அடி என அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு 

அவர் அரசியல் கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். முழு தீர்ப்பு விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியே வரவில்லை வந்த பிறகு அதற்கு நான் பதில் சொல்கிறேன். சம்பட்டி அடி என்ற சொன்ன அவருக்கு நான் சொல்ல விரும்புவது. ஏற்கனவே இதே உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லி இருந்தார்கள். அதில் எந்த சிக்கலும் இல்லை முறையாக பிரித்து வைத்திருக்கிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று உணர்ந்த உச்சநீதிமன்றம் ஒன்பது மாவட்டங்களுக்கும் தேர்தல் தள்ளி வைக்க சொல்லியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் வரைமுறை கொடுத்துள்ளது. எங்களுக்கு அவர் சம்பட்டி அடி என்று சொல்கிறார் அல்லவா அவர்களுக்கு கொடுத்தது 'மரண அடி' இதுதான் என்னுடைய பதில்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா அறிமுகப்படுத்திய நேரத்திலேயே திமுக சார்பில் எங்களுடைய மக்களவை குழுவின் உடைய தலைவர் டி.ஆர்.பாலு கடுமையாக எதிர்த்திருக்கிறார். எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அறிமுக நிலையிலேயே கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளார். மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற தயாநிதிமாறன் அழுத்தம் திருத்தமாக துணிச்சலாக எல்லா பிரச்சனைகளையும் பேசி பதிவு செய்துள்ளார். இரவு 12 மணி வரை நடைபெற்ற விவாதத்தில் முழுமையாக திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஓட்டெடுப்பில் கலந்துகொண்டு எதிர்த்து ஓட்டும் போட்டுள்ளார்கள். 

அதிமுகவை பொறுத்தவரை இதை ஆதரித்து வெளியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். ஆதரித்து பேசும் இந்த சூழ்நிலையை பார்க்கும் பொழுது எடப்பாடி ஆட்சியை இதுவரை ஊழல் ஆட்சி, கொலைகார ஆட்சி, கொள்ளைகார ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தோம் இப்பொழுது தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாகவும் எடப்பாடி ஆட்சி உள்ளது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.