Advertisment

விக்கிரவாண்டி தொகுதியை தக்க வைத்தது திமுக!

DMK retained Vikravandi constituency

Advertisment

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத்தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக வேட்பாளர் 1,23,195 வாக்குகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 55,026 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,470 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், கிட்டத்தட்ட 67ஆயிரத்திற்கும் மேற்பட்டவாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதன்மூலம் திமுக விக்கிரவாண்டி தொகுதியை தக்கவைத்துள்ளாது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா டெப்பாசிட்டை இழந்துள்ளார்.

vikiravnadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe