Skip to main content

ஆளுநர் வருகை: கருப்பு கொடி காட்டி சிறை செல்ல தயாராகும் தி.மு.கவினர்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
pudukkottai dmk

    


 

 


தமிழக ஆளுநர் எங்கே சென்றாலும் அங்கு தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் கருப்புக் கொடி காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இனிமேல் கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். அதனால் ஆளுநர் செல்லும் வழியில் உள்ள சுத்தம் செய்யும் பணியும், பேருந்து நிலையம் பகுதியில் உடையும் நிலையில் உள்ள சுவர்களுக்கும், கழிவறைகளுக்கும் வண்ணம் தீட்டும் பணியும் தீவிரமாக நடந்தது. 
 

 

 

    ஆளுநர் வருகை உறுதி செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க பொருப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ, செல்லப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு கொடி காட்ட அனுமதி வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. செல்வராஜிடம் மனு கொடுத்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதுடன் கைது செய்யப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டது. அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் தி.மு.கவினர் கருப்புக் கொடி காட்டி கைதாக தயாராக உள்ளதாக கூறிவிட்டு வெளியேறினார்கள். அப்போது கைது செய்யப்படும் நபர்கள் சிறைக்கு அனுப்பவும் போலிசார் தயாராக உள்ளனர். 
 

 

 

    இந்த தகவல் பரவியதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தி.மு.க வினரும் கைதாகி சிறை செல்ல தயாராக உள்ளதாக மாவட்ட கழகத்தில்ல் பெயர் பட்டியல் கொடுத்துள்ளனர். அதில் சுமார் 1200 பெயர்கள் உள்ளது. மேலும் பலர் இன்று கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல தயாராக மாற்று உடைகள், சாப்பாட்டு தட்டு, குவளை, போர்வை போன்றவற்றை பையில் எடுத்துவைத்துக்கொண்டு தயாராக உள்ளனர்.இந்த நிலையில் இன்று அரசு மகளிர் கல்லூரி வழியாக செல்லும் ஆளுநருக்கு எதிரே உள்ள திடலில் நின்று கருப்பு கொடி காட்ட தயாராகி உள்ளனர். 
 

 

 

 


    

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.