Skip to main content

திமுக மறியல், மண்டை காய்ந்த போலிஸ் – இறங்கிவந்த ரயில்வே துறை!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசையும் கண்டித்து திமுக தனது கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தொடர் போராட்டம் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 5ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது திமுக. அதிமுக, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளுர், ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற நகரங்கள், பேரூராட்சிகளில் 95 சதவிதம் கடைகள் அடைக்கப்பட்டு முழு கடையடைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளன. பேருந்துகள் 10 சதவிதம் மட்டுமே இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயங்கின.

 

thiruvannamalai protest

காலை 8 மணிக்கு திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து திமுக மா.செவும், முன்னால் அமைச்சருமான எ.வ.வேலு,எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமுமுக உட்பட பல கட்சிகள் ஊர்வலமாக சென்று திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இரயில் நிலையத்தின் இரண்டு நுழைவாயில்கள் மூடப்பட்டு மாநில காவல்துறை மற்றும் இரயில்வே போலிஸார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ரயில் நிலையத்துக்குள் புகுந்த கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்ல வேண்டிய பயணிகள் இரயில் போளுருக்கும் – திருவண்ணாமலைக்கும் இடையே நிறுத்தப்பட்டது.

 

thiruvannamalai protest1


இரயில் வந்தால் தான் இங்கிருந்து நகருவோம் என முரண்டு பிடித்தனர் திமுகவினர். திருவண்ணாமலை இரயில்வே அதிகாரிகள், இரயிலை இயக்கி அசம்பாதவிதம் ஏதாவது ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது அதனால் இரயிலை இயக்க முடியாது என்றனர். மாநில போலிஸார் என்ன செய்வது எனத்தெரியாமல் முழித்தனர். பின்னர் திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி ரங்கராஜன் சம்பவயிடத்துக்கு வந்து, திமுக பிரமுகர்களிடம் பேசிவிட்டு, ரயில்வே அதிகாரிகளிடம் சென்று நீங்க இரயிலை வரச்சொல்லி தகவல் தந்துடுங்க. இரயிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அவுங்க இரயில் மறியல் போராட்டம் செய்துட்டு கலைந்து போய்டுவாங்க என வாக்குறுதி தந்தார். நீண்ட நேர ஆலோசனைக்கு பின்பு ரயில்வே அதிகாரிகள் இரயிலை இயக்க ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு 1 மணி நேரம் கழித்து வழியில் நிறுத்தப்பட்ட இரயில் திருவண்ணாமலை ரயில்வே நிலையத்துக்கு வந்தது.

 

tvmalai


ரயில்வே பாதையில் அமர்ந்திருந்த திமுக உட்பட எதிர்கட்சியினர் இரயில் முன் நின்று 10 நிமிடம் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது இரயில் ஓட்டுநர் ஹாரன் அடிக்க மறியலில் ஈடுப்பட்டவர்கள் கோபமாகிவிட்டனர். அவர்கள் இரயிலை கோபத்தில் தட்டினர். போலிஸார் உடனே அனைவரையும் கைது செய்தனர். அதன்பின் ஒன்னரை மணி நேர தாமதத்துக்கு பின் இரயில் புறப்பட்டு விழுப்புரம் சென்றது.

5 பேருந்துகளில் திமுகவினர் உட்பட எதிர்கட்சியினரை கைது செய்து அழைத்து சென்றனர் போலிஸார். இதில் மகளிர்க்க என தனியாக ஒரு பேருந்தை ஒதுக்கி அதில் அழைத்து சென்றனர். அதற்கு மேல் கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச்செல்ல பேருந்துகள் இல்லாததால் 300க்கும் அதிகமான இருசக்கர வாகனத்தில் கட்சியினர் கைதாகி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். கைதானவர்களை தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளது காவல்துறை.

திருவண்ணாமலை நகரில் மட்டும் பெண்கள் உட்பட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரம் பேர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.