Advertisment

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து திமுக’வினர் போராட்டம்...! (படங்கள்) 

Advertisment

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை 93 ரூபாயாகவும், சமையல் எரிவாயு விலை 750 ரூபாயாகவும் உயர்ந்து வரும் நிலையில், மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நூதன முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (22.02.2021) திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை 10:00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தயாநிதி மாறன்எம்.பி. தலைமையிலும், வேளச்சேரி, சின்னமலை பகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் வடசென்னை கடற்கரை சாலை இந்தியன் வங்கி அருகில் கலாநிதி வீராசாமி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் மாவட்டச் செயலாளர் சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்என பலரும் கலந்துகொண்டனர்.

வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடந்த போராட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக மாட்டுவண்டியில் ஆட்டோவை ஏற்றி சென்று நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Chennai protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe