தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி வாசோ வாட்டர் சிஸ்டம்ஸ் சார்பில் 2000 ஏழை எளியோருக்கு புத்தாடை மற்றும் பொங்கல் அரிசி, கரும்பு வழங்கும் விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் திமுக இன்று காலை நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி.யும், திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். வாசோ வாட்டர் சிஸ்டம்ஸ் வாசுதேவன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.