Skip to main content

நான் ஏன் போகணும்... இந்த சின்ன வயசுல ந.செ.பதவியா? திமுக பிரமுகரின் செயலால் பதறிப் போன மனைவி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

இப்போதைய திருப்பத்தூர் மாவட்டம் -வாணியம்பாடி தி.மு.க. ந.செ.வாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் சிவாஜிகணேசன். சாலை விபத்தொன்றில் சிவாஜிகணேசன் திடீர் மரணம் அடைந்ததால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த அவரது மகன் சாரதிகுமாரை ந.செ.வாக்கியது தி.மு.க. தலைமை. "இந்த சின்ன வயசுல ந.செ. பதவியா?' என அப்போதே மாவட்ட உ.பி.க் களிடையே முணுமுணுப்பு கிளம்பியது.

இப்போது சாரதிகுமாரின் மனைவியே, தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்து சலசலப்பைக் கிளப்பியுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் சாரதிகுமார் மீது புகார் கொடுத்துவிட்டு வந்த ரம்யாவை நாம் நேரில் சந்தித்தபோது கண்ணீருடன் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

 

dmk



"எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றாலும் வாணியம்பாடியில் இருக்கும் எனது பாட்டி வீட்டில் தங்கி படிச்சுக்கிட்டிருந்தேன். நான் 7-ஆவது படிக்கும்போதிருந்தே என்னையே சுத்தி வருவார் சாரதி. 11-ஆவது படிக்கும்போது அவரோட காதலை ஏத்துக்கிட்டேன். மேல்படிப்புக் காக சேலத்தில் உள்ள கல்லூரியில சேர்த்துவிட்டு, அங்கே சத்யப்ரியா என்பவரின் வீட்டுமாடியில் தங்க வைத்தார். சாரதியைவிட 15 வயது மூத்தவரான சத்யப்ரியாவுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு.

காலேஜ் படிப்பு முடிஞ்சதும் 2016-ல் கல்யாணம் செய்து கொண்டோம். திருமணத்தை சத்யப்ரியாதான் முன்னின்று நடத்தினார். அதையாவது ஏத்துக்கலாம்... நாங்க ஹனிமூனுக்கு போனப்ப கூடவே வந்தத எப்படிங்க ஏத்துக்க முடியும்? ஒருமுறை ஏலகிரிக்குப் போனப்பவும் சத்யப்ரியாவைக் கூட்டிக்கிட்டு வந்தாரு சாரதி குமார். அவர்கள் ரெண்டு பேரும் கைகோர்த்துக் கிட்டு, பப்ளிக் பிளேஸ்ல கிஸ் அடிச்சுக்கிட்டுன்னு கண்றாவியா இருந்துச்சு. பொறுமை இழந்த நான் எரிச்சலாகி, சத்யப்ரியாவுடன் சண்டை போட்டேன். எங்க மாமனார் இறந்ததும் எங்க வீட்லயே வந்து டேரா போட்டார் ப்ரியா. என்னோட புருஷனும் அவரும் சேர்ந்து தண்ணி அடிச்சுட்டு கூத்துப் பண்ற கொடுமையெல்லாம் நடந்துச்சு. இதெல்லாம் பத்தாதுன்னு கோயம்புத்தூர்ல படிச்சிக்கிட்டிருக்கும் தன்னோட அக்கா மகள் ஆர்த்தியை சாரதிக்கு அறிமுகப்படுத்தி வச்சிருக்கா சத்யப்ரியா. அவர்கள் நடத்திய கூத்துகள் எல்லாமே ப்ரியாவின் செல்போனில் ரெக்கார்ட் ஆகியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி, சாரதியிடம் கேட்டப்ப அடிக்க ஆரம்பிச்சார்.

 

incident



நான் கன்சீவா இருந்தப்பவும் அவரோட டார்ச்சர் தாங்க முடியல. என்னோட 140 பவுன் நகைகளை வித்து ப்ரியாவிடம் கொடுத்தார். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததும் ஒரு முறை கோயம்புத்தூர் போனோம். அங்க ஜி.ஆர்.டி. ஓட்டலில் இரண்டு ரூம் புக் பண்ணினவர், என்னையும் குழந்தையையும் ஒரு ரூமில் விட்டுவிட்டு, இன்னொரு ரூமில் ப்ரியாவுடனும் ஆர்த்தியுடனும் தங்கிட்டாரு என் புருஷன்.

சரி, சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரன் காலில் விழுவோம்னு முடிவு பண்ணி, என் புருஷனை விட்ருன்னு ப்ரியாவிடம் கெஞ்சினேன். "நான் ஏன் போகணும், நீ அவரை டைவர்ஸ் பண்ணிட்டுப் போ... இல்லேன்னா தற்கொலை பண்ணிக்கோ'ன்னு தெனாவெட்டா பேசுனா. சென்னையில் போலீஸ் எஸ்.பி.யாக இருக்கும் ப்ரியாவின் அண்ணனிடமும் சொல்லி அழுதேன். "நானும் சொல்லிப் பார்த்துட்டேன், அவ திருந்துற மாதிரி தெரியல, அவள வீட்டைவிட்டு ஒதுக்கி வச்சுட்டோம், அதனால உன்னோட வாழ்க்கையை நீயே முடிவு பண்ணிக்கம்மா'ன்னு கை விரிச் சுட்டாரு.


மறுபடியும் அடி-உதை டார்ச்சர் அதிகமானதும் தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். பயந்துபோன அவர் ஆஸ்பிடலில் சேர்த்து காப்பாத்துனாரு. அதுக்கப்புறம் குழந்தையுடன் என் வீட்டிற்கு வந்துட்டேன். இங்கும் வந்து என்னை மிரட்ட ஆரம்பிச்சார். காஞ்சிபுரம் போலீசில் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டு, அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரிடமும் சாரதி பண்ணிய அட்டூழியங்களைச் சொன்னேன். "விசாரிச்சு நடவடிக்கை எடுக்குறேன்'னு வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். சென்னையில் தங்கி ஒரு கோர்ஸ் படிச்சிக்கிட்டிருக்கும்போது மிரட்டியதால்தான் கமிஷனரிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணினேன்'' என கதறி அழுதார் ரம்யா.


நாம் சாரதிகுமாரிடம், ரம்யா விவகாரம் குறித்துக் கேட்டபோது, ஒரு நில விவகாரத்தில் என்னை தலையிடச் சொன்னார் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி. அதை நான் முடித்துத் தராத கோபத்தில்தான் ரம்யாவை தூண்டிவிடுகிறார். எங்க கட்சியின் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவகுமாரும் இதன் பின்னணியில் இருக்கார். நானும் ப்ரியாவும் கட்டிப்பிடித்த மாதிரி போட்டோ எடுத்ததே ரம்யாதான்'' என்கிறார்.

சாரதிகுமாரின் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அமைச்சரும் தி.மு.க. வி.ஐ.பி.யுமான இந்திரகுமாரியிடம் நாம் பேசியபோது, என்னோட சகோதரி நிலம் சம்பந்தமான வழக்கு ஒன்றை திருப்பத்தூர் எஸ்.பி. விசாரித்து வருகிறார். அப்படி இருக்கும்போது சாரதிகுமாரின் உதவியை நான் ஏன் கேட்கவேண்டும்? அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. என் மீது குற்றம்சாட்டும் அந்த தம்பி மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை'' என்றார்.

இதற்கிடையே ந.செ.பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் வாங்கிவிட்டது தி.மு.க. தலைமை.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.