Skip to main content

பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓபிஎஸ்,இபிஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மீசையை எடுக்கிறேன்-பழனிமாணிக்கம் பேச்சு

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

புதுக்கோட்டை திமுக தெற்கு மாசெ தங்கவேல் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் மாஜி மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்.

      

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வமும் அவர்களின் கட்சிக்காரர்களின் விருப்பமில்லாமல் பதவியில் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் இருவரும் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டால் அவர்களின் கட்சிக்காரர்களே தோற்கடிப்பார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் என் மீசையை எடுத்துக் கொள்கிறேன்.

   

dmk

 

ராமதாஸ் கூட்டணி வைக்க 10 கட்டளை வச்சாராம் நிறைவேற்றுவார்கள் என்று கூட்டணி வச்சாராம்.. இப்ப மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பது யார்? இப்போது நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை பிறகு எப்படி ஏற்பார்கள். உடனே மதுவிலக்கை அமல்படுத்தச் சொல்ல முடியாதா?  நீட்டை ரத்து செய்ய முடியாதா? சீட்டுக்காக மக்களை ஏமாற்ற 200% என்றெல்லாம் பேசிவிட்டு இப்ப கூட்டணி. மக்கள் சிரிக்கிறார்கள். 

 

அதுக்கு விஜயகாந்த் பரவாயில்ல அவர்களுக்கு கொடுத்ததைவிட ஒரு சீட் மேல கொடுன்னு 3 நாளா இழுத்தடிக்கிறார்.

 

 

இப்ப ரூ 2 ஆயிரம் திட்டம் ஒன்று ரூ 6 ஆயிரம் திட்டம் ஒன்றும் அறிவிச்சிருக்காங்க. கடந்த 5 வருசமா இந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை கண்ணுக்கு தெரியல இனிதான் தெரியுமா? ரூ 2 ஆயிரத்துக்கு வறுமை கோடு போடனுமாம். அந்த கோட்டுக்காக விவசாயிகள் தாலுகா ஆபிஸ்ல குவியுறாங்க அதிகாரிகள் திணறுறாங்க.

    

4 ஊருக்கு வந்த மோடி எடப்பாடி மாதிரி விமானத்துலயாவது வந்து புயல் பாதிப்பை பார்த்தாரா? விவசாயிகள் மீது அவ்வளவு தான் அக்கரை.  வாசன் பாவம் 2 கேட்கிறார் போல ஒன்னு தான்னு சொல்றாங்க மூப்பனார் பிள்ளைக்கு ஏற்பட்ட நிலைமையை பார்த்தீங்களா?

   

திமுக கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாகும் கூட்டணி அல்ல பல வருடங்களாக மத்திய மாநில அரசுகளின் அநீதிகளுக்கு எதிராக சேர்ந்த மக்களுக்காண கூட்டணி.

  

14 பேரை தூத்துக்குடியில் சுட்டுக் கொன்ற நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்த அரசாங்கம் தான் விவசாயிகளுக்கு நல்லது செய்யப் போகிறதா?  ஸ்டெர்லைட் ஆலைக்கான தீர்ப்பு என்பது தேர்தலுக்கான தீர்ப்பாக உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தீர்ப்புகள் மாறலாம்.

   

ராணுவ வீரர்கள் 44 பேர் இறப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது. எல்லாம் முடிஞ்ச பிறகு ஒத்திகை பார்ப்பது வேதனையானது. ராணுவத்தை எப்பவும் தயார் நிலையில் வைத்திருக்க முடியாத ஒரு அரசாங்கமாக உள்ளது மோடி அரசாங்கம். அதனால தான் ஒத்திகை என்ற பெயரில் நம்இளைஞர்களையே பலி கொடுக்கிறார்கள். நாம் ஒத்திகை பார்க்கும் போது எதிரி சுதாரித்துக்கொள்ளமாட்டானா? தேர்தலுக்காக ராணுவ வீரர்களின் உயிர்களை அடமானம் வைக்காதீர்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.