திமுகவின் சார்பில், அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் இருக்கும் அண்ணா மற்றும் கலைஞர்நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மு.க ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா மற்றும் திமுகவின் உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பெருந்திரளாக கலந்துகொண்ட கட்சியின் தொண்டர்களும் அவரது நினைவிடத்திற்கு மலரஞ்சலி செய்துமரியாதை செலுத்தினர்.