Skip to main content

தி.மு.க. மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெட்டிப் படுகொலை!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

dmk party leader incident police investigation

 

நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). நெல்லை கிழக்கு மாவட்டத்தின் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பில் இருப்பவர், இந்தக் கிராமத்தின் அருகிலுள்ள பத்தல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையின் உறவினரான ஐயப்பன் (வயது 45). இவருக்கும், செல்லத்துரைக்குமிடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்பகை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், செல்லத்துரை தான் வெளியேபோகும் போது தனக்குப் பாதுகாப்பாகச் சிலரை அழைத்துச் செல்வாராம். 

 

இந்த நிலையில் நேற்று (18/02/2021) இரவு செல்லத்துரை தன் ஊருக்கு வெளியே உள்ள தனது கோழிப்பண்ணை தோட்டத்தைப் பார்ப்பதற்காகத் தன் பைக்கில் தனியாகச் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வேவு பார்த்தவர், அன்றைய தினம் செல்லத்துரை தனியே செல்வதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அங்கு பதுங்கியிருந்துள்ளனர். பின்னர், நொடியில் செல்லத்துரையின் பின் பக்கமாக வந்து, அவரது கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் சரமாரியாக வெட்ட, நிலை குலைந்த செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்திருக்கிறார்.

 

இது குறித்த தகவலறிந்த செல்லத்துரையின் உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்.பி.மணிவண்ணன், சேரன்மாதேவி ஏ.எஸ்.பி.பிரதீப் ஆகியோர் செல்லத்துரையின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய எஸ்.பி.மணிவண்ணன் பதற்றத்தைத் தணிக்க போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்.

 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முக்கூடல் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலப்பிரச்சிரனைத் தொடர்பாக இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரியவர, தலைமறைவாகியிருக்கும் ஐயப்பனைத் தேடி வருகின்றனர்.முன்னதாக தகவலறிந்து முக்கூடல் மருத்துவமனைக்கு வந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூங்கோதை செல்லத்துரையின் உடலைப் பார்த்துக் கண்கலங்கினார்.

 

கொலையான செல்லத்துரைக்கு பிரேமா என்ற மனைவியும், ஊர்மிளா, ஐயப்பன் என்ற இரண்டு குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.