Skip to main content

கடந்த இரண்டு வருடங்களாக அடிப்படை வசதி இல்லை ஊராட்சி சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் புகார்!

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

dd

 

மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து, நம்முடைய செயல்பாடுகள் இனி அமையவேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஜனவரி 9-ம் தேதி அன்று தொடங்கி பிப்ரவரி 17-ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டி ஊராட்சி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் ஊராட்சி சபைக்கூட்டம் கிராம மைதானத்தில் நடைபெற்றது. 

 

இக்கூட்டத்திற்கு ஊராட்சி அவைத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி நளினி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் இராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார். கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி பேசும்போது, முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழக கிராமங்கள் அடைந்த வளர்ச்சி, சரித்திர சாதனை படைத்தது. ஆனால் கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தில் உள்ள கிராமங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு சென்றுவிட்டன. கிராமங்களில் தண்ணீர் வசதி, மின்விளக்கு, சாலை வசதி இல்லாமல் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமப்படுகின்றனர். ஆத்தூர் தொகுதியில் மட்டும் சுமார் 8 ஆயிரம் முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்தி விட்டனர். நாங்கள் ஆதாரத்துடன் மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளோம் விரைவில் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் என்றார். கலைஞர் அவர்களின் ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச டி.வி, இலவச எரிவாயு அடுப்பு, இலவச சைக்கிள் ஆகியவற்றை 10 வருடங்களாகியும் பொதுமக்கள் இன்றுவரை பயன்படுத்துகின்றனர். ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதிமுக அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டரை ஒரு வீட்டில் கூட பார்க்க முடியாது. 

 

தரமற்ற பொருட்களை வழங்கிய இந்த ஆட்சி தரமில்லாத ஆட்சியாக உள்ளது. மத்தியில் ஆளும் மோடி அவர்கள் ஆட்சியை பிடிக்கும் முன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுகிறேன் என வாய் ஜாலம் பேசி ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அவர் ஆட்சியில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்துகொண்டே வருகிறது. பெட்ரோல் விலை, வரலாறு காணாத விலையாக உள்ளது என்றார். திமுக ஆட்சிக்காலத்தில் பருப்பு, உளுந்து உள்ளிட்ட மளிகை சாமான்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது தலைவர் கலைஞர் அவர்கள் ரூ.50க்கு மளிகை சாமான்கள் அடங்கிய கிப்ட் பேக்கினை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கி மக்களின் குறைகளை உடனே தீர்த்து வைத்தார். ஆனால் இன்று லஞ்சம் வாங்குவதே குறிக்கோளாக செயல்படும் அதிமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. விரைவில் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என்று கூறினார். 

 

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் ஊராட்சி பகுதியில் முறையான குடிதண்ணீர் வசதி செய்யவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை எனவும் புகார் செய்ததோடு, ஆலமரத்துப்பட்டி பிரிவில் பயணிகள் நிழற்குடை வேண்டும் என்றும், அண்ணாமலையார் மில் அருகே ஹைமாஸ் விளக்குகள் வேண்டும் என்றும் கேட்டு மனு கொடுத்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய அவைத்தலைவர் வீரைய்யா, பொருளாளர் லட்சுமணன், ஒன்றிய துணை செயலாளர்கள் எம்.சி.பாண்டி, ஆலமரத்துப்பட்டி ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆரியநல்லூர் தங்கவேல், செட்டியபட்டி பவுன்ராஜ், பிள்ளையார்நத்தம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் எஸ்.நாராயணசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜகணேஷ், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அருண்குமார், வார்டு செயலாளர்கள் மன்மதன், பூபதி ராஜ்குமார், புருஷோத்தமன், மரிய சுந்தர்ராஜ், காளாஸ்திரி, பிச்சைக்காளை, தயாளன், பொம்மையசாமி, உட்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞரணியினர் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஒன்றிய துணை செயலாளர் ஜி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இனி ஆண்டிற்கு 6 கிராமசபை கூட்டங்கள் - புதிய அறிவிப்பு வெளியீடு 

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

mk stalin

 

தமிழகத்தில் இனி ஆண்டிற்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

 

விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இனி தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.    

 

முன்னதாக வருடத்திற்கு நான்கு நாட்கள் என ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது. 
 

 

Next Story

‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

ddd

 

தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனைப்புதூர் ஊராட்சியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். ஸ்டாலின் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் அராஜகம் செய்வார்கள். ஓட்டு எண்ணும் இடத்திலும் அக்கிரமம் செய்வார்கள். அதனை மீறி 70% இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு காரணம் மக்கள்தான். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில், ஆட்சியில் இருப்பதுபோல நாங்கள்தான் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறோம். 

 

கரோனா தொற்று நோயால் பலரையும் இழந்திருக்கிறோம். 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இறந்துபோனார்கள். அப்படிப்பட்ட கொடிய நோய் பற்றிய ஆராய்ச்சி நடந்துவருகிறது. தடுப்பூசி போடவே பயப்படுகிறார்கள்; சந்தேகப்படுகிறார்கள். இப்படியான நிலையில், உயிரையே பணயம் வைத்து, ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் மூலம் மக்களுக்காக களத்தில் நின்றார்கள். மருந்து மாத்திரை, மளிகை, உணவு என மக்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டது தி.மு.க.. ஆட்சியில் இருப்பதுபோல செயல்பட்டோம்.

 

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யாருனு தெரியுமா? ஓ.பி.எஸ் தானே? பாத்திருக்கீங்களா? பன்னீர்செல்வம்னா, ரொம்ப பணிவா இருப்பாரா? பதவி வரும்போது பணிவு வரனும். பதவி வரும்போது எப்படி மாறினார் என்பது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அவ்வளவு அமைதியா, உத்தமபுத்திரர் மாதிரி ஒரு காட்சி. மக்களை ஏமாற்றுகிறார்.

 

அரசியலில் லக்கில் வந்தவர். மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது. மூன்று முறை முதல்வராக இருந்து, நாட்டுக்காக என்ன செய்தார்? நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்குனு சொன்னார். என்ன மர்மம்னு அவரும் சொல்லல, ஆளும் கட்சியினரும் சொல்லல. 

 

27ம் தேதி சசிகலா வெளியே வந்த பிறகு, ஓ.பி.எஸ் இந்தப் பதவியில் இருப்பாரா என்று கூட தெரியாது. அது அவர்கள் பிரச்சனை. எடப்பாடி என்று சொன்னால், அந்த ஊருக்கு அவமானம். பழனிசாமி என்று சொல்லுங்க. ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடம் தியானம் செய்தார். நீதி விசாரணை கேட்டது நாங்கள் இல்லை. இறப்பில் மர்மம் இருக்குணு சொன்னது நான் இல்ல. 

 

ஆறுமுகசாமி விசாரணை கமிசன் அமைத்து மூன்று வருடத்தை தாண்டியாச்சு. என்ன ஆச்சுணு தெரியல. விசாரணைக்கு ஆஜராக்கச் சொல்லி, எட்டுமுறை கூப்பிட்டும் இவர் போகவில்லை. பாக்கெட்டுல, டேபிள்ல ஜெயலலிதா படத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள். யார் விட்டாலும் ஸ்டாலின் விடமாட்டான்" என்றார்.

 

கூட்டத்தில் நாகலாபுரம் ராஜாத்தி பேசும்போது, “தர்ம யுத்தம் செய்துவிட்டு, ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் செய்து, சாவு பற்றி விசாரணை பண்ணுவோம்னு சொன்னார். விசாரணையும் இல்லை. விசாரிக்கப் போகவும் இல்லை” என்று கூறினார்.

 

இதுபோல் பூதிப்புரம் லெட்சுமி பேசும்போது, “முதல்ல ரோடு போட்டாங்க. கமிசன் வாங்கினதுனால ரோடு பேந்துபோச்சு. ரோட்டுக்கு பச்சர் போடுறாங்க. ஓ.பி.எஸ் எங்க ஊருக்கு வந்தா கொலையே பண்ணுவேன்” என்று கூறினார். 

 

ddd

 

அப்போது ஸ்டாலின் குறுக்கிட்டு, ''எவ்வளவு ஆத்திரம் இருக்குணு வெளிப்பட்டது. தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க. ஜனநாயத்தில் முறை இல்லை. நீங்கள் சொன்ன வார்த்தையைத் திரும்ப வாங்கிக்கிறேன் என்று சொல்லுங்க'' என்றார்.

 

''நாங்க ரொம்ப வெறுப்புல இருக்கோம். கோபத்துல இருக்கோம். உங்களுக்காக மன்னிப்பு கேட்கிறேன். அவரிடம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்'' என்றார் பூதிப்புரம் லெட்சுமி.

 

ஸ்டாலின்: சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன் சொல்லுங்க.

 

பூதிப்புரம் லெட்சுமி: வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன். 

 

பிரேமலதா ஆதிபட்டி: நான் ஒரு செவிலியர். யாருக்கும் கல்விக் கடன் தள்ளுபடி ஆகல. எனக்கும் தள்ளுபடி ஆகல என்றனர். 

 

அதன்பின்னர் பேசிய ஸ்டாலின், “போடியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவரவில்லை. சங்கராபுரம் பகுதியில் சிப்காட்டிற்கு பூமி பூஜை மட்டுமே போடப்பட்டுள்ளது. குமுளி போக்குவரத்து பணிமனை இல்லை. அரண்மனை புதூர், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் போன்ற பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. குரங்கனி டாப்ஸ்டேசன் போன்ற பகுதிகளில் விளையும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லை. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசிகள் குறைவாக இருந்தது. அதிமுக ஆட்சியில் சிலிண்டர், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது” என்று கூறினார்.