Skip to main content

'பொருளாதாரத்தை சீர்படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை' - கனிமொழி எம்.பி. காட்டம்!!!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

DMK MP kanimozhi press meet

 

தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கரோனா கால பேரிடர் நிவாரணமாக தொகுதியின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் நலிந்த மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக கோவில்பட்டி நகரின் பல பகுதிகளிலிருக்கும் ஏழை எளிய மக்களின் நலம் பொருட்டு நிவாரண தொகுப்புகளை அவர் வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்த்து வரும் எட்டு வழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு சொந்த ஆதாயத்திற்காக கொண்டு வருவதில் தீவிரம் காட்டுகிறது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், கரோனா பொது முடக்கத்தால் போராட முன்வராத காலகட்டத்தை தனக்குச் சாதகமாகக் கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றுவது என்பது மிக மோசமான முன்னெடுப்பு. அரசு இதனை நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் விவசாயிகள், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்து போராடுவர். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும், பொருளாதாரத்தை சீர் படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை. தொழிற்சாலைகள் விவசாயிகள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் என்று யாருக்கும் மகிழ்ச்சியையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய எந்த விதமான திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதுதான் வெளிப்படை. தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வராமலிருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

 

 


தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை அளிப்பதற்கான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதை பல தனியார் மருத்துவமனைகள் மீறிச் செயல்பட்டு வருகின்றன. கரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. அரசு ஒரு அறிவிப்பை செய்துவிட்டு நிறுத்திவிடுவதோடு கடமை முடியவில்லை. அந்த அறிவிப்பு பின்பற்றப்படுகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டியது அரசின் கடமை. சூழ்நிலை காரணமாகத்தான், மக்கள், தனியார் மருத்துவமனையைப் பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார். நிவாரணம் மற்றும் பேட்டியின்போது தி.மு.க.வின் வடக்கு மா.செ.வான கீதா ஜீவன் மற்றும் நகர பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது